எல்லாம் ரத்தமும், வியர்வையும் சிந்தி சம்பாதித்தவை... ஜெ. தீர்ப்பு குறித்து குவியும் கருத்துக்கள்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து டிவிட்டரில் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதிலிருந்து சில
|
தல்வீன் சிங்
ஸோ, ஜெயலலிதாவின் சொத்துக்கள், அவரது நகைகள், சேலைகள், அவரது வீடு உள்ளிட்ட அனைத்துமே இத்தனை காலமாக அவர் வியர்வையும், ரத்தமும் சிந்தி சம்பாதித்தவை. ஊழல் அல்ல...!
|
டேம்செல் இன் திஸ் டிரஸ்
இந்தியாவில் சிறை உடைப்பை சட்டரீதியாக்கி விட்டதாகவே தோன்றுகிறது.
|
ரானா அயூப்
ஜெயா தீர்ப்பு, சல்மான் கான் பெயில். இதற்கு மேல் என்ன நிரூபணம் தேவை. பணக்காரர்களையும், பண பலத்தையும் பாராட்டுவோம்!
|
பிரேர்னா கெளல் மிஸ்ரா
மரியாதைக்குரிய நீதிமன்றம் சொல்லியுள்ள தீர்ப்பு என்னவென்றால், ஜெயலலிதாவின் சொத்துக்கள் வருமானத்திற்கு மீறியவை அல்ல, மாறாக அவரது சம்பாத்தியம் மூலம் வந்தவை என்பதே...!