கந்து வட்டியை விட்டுட்டாங்க... மதுரை அன்புச் செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக மட்டும் வழக்கு!
சென்னை: சினிமா பைனான்சியரும் தயாரிப்பாளருமான மதுரை அன்புச் செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டிக் கொடுமை பற்றி எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
சினிமாவில் ஏற்பட்ட நஷ்டம், அதற்காக வாங்கிய கடன், பைனான்சியர் அன்புச் செழியனின் சித்திரவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தனது தற்கொலைக் கடிதத்தில் அசோக்குமார் தெரிவித்துள்ளார். இவர் இயக்குநர், தயாரிப்பாளர் சசிகுமாரின் அத்தை மகன் மற்றும் சசிகுமார் கம்பெனியின் மேனேஜர். சசிகுமார் தயாரிக்கும் படங்களின் இணைத் தயாரிப்பாளரும் இவர்தான்.

சினிமா பைனான்சியர், விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவை ஆட்டுவிக்கும் மதுரை அன்புச் செழியனின் வட்டி சித்திரவதை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக அசோக்குமார் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இதன்பேரில் மதுரை அன்புச் செழியனைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு இயக்குநர் சசிகுமார், அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இன்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட வளசரவாக்கம் போலீசார், அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டியதாக இபிகோ 306வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில்தான் கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தங்களைத் தாங்களே கொளுத்திக் கொண்டு மாய்ந்து போனார்கள். அந்த கொடுமையின் அவலம் தீரும் முன்பே, தமிழ் சினிமாவில் பிரபலமான ஒருவரின் மேனேஜர் அதே வட்டிக் கொடுமையால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுள்ளார். ஆனால் இதனை கந்து வட்டி ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல், தற்கொலைக்குத் தூண்டிய பிரிவின் கீழ் மட்டும் பதிவு செய்துள்ளனர் போலீசார்.
இதற்கான முதல் தகவல் அறிக்கையை நாளை காலை 9 மணிக்குள் தருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மதுரை அன்பு எங்கிருக்கிறார், அவரை எப்போது கைது செய்வார்கள் என்பது குறித்து எந்தத் தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை. ஆனால் நாளைக்கும் அன்புச் செழியன் கைதாவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications