விஜயேந்திரர் மீது வழக்கு பதிய வேண்டும்.. அன்னைத் தமிழை அவமதித்துவிட்டார்.. விசிக கண்டனம்
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு விசிக கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்து இருக்கிறது. விஜயேந்திரர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சென்னையில் நேற்று நடந்த சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி மடத்தின் இளைய அதிபர் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருந்தார். இது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

ஆனால் அவர் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எழுந்து நின்றார். தற்போது விஜயேந்திரரின் செயலுக்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
அதில் ''தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மீது வழக்குப்பதிய வேண்டும். அன்னைத் தமிழை அவமதித்த விஜயேந்திரர் தமிழ் மக்களிடையே வருத்தம் தெரிவிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications