குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலிப் போராட்டம்... வேல்முருகன் அழைப்பு !
சென்னை: குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி நாளை தமிழகம் தழுவிய அளவில் நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு பாஜகவுக்கு சேவகம் செய்யும் அரசாகவே உள்ளதாகவும், அது தமிழக மக்களுக்கான அரசாக செயல்படவில்லை என்றும் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்புச் சட்டங்களை பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்கள் நிறைவேற்ற மாட்டோம் என அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு மட்டும் அதை நிறைவேற்றுவோம் என அறிவித்திருப்பதாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருபதாவது;
ஒன்றிய ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசு கொண்டுவந்திருப்பதும், அதனை அதிமுக எடப்பாடி பழனிசாமி அரசு அமல்படுத்த இருப்பதுமான குடியுரிமைத் திருத்த சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து நாளை (30.01.2020) அதாவது தேசத் தந்தை காந்தியடிகள் ஆர்எஸ்எஸ்சின் தாய் அமைப்பான இந்து மகா சபையின் கோட்சேயால் கொல்லப்பட்ட கொடுந்துயர நாளான ஜனவரி 30 அன்று 'தமிழக மக்கள் ஒற்றுமை மேடை' சார்பில் தமிழகம் தழுவிய மனித சங்கிலிப் போராட்டம் நடக்கவுள்ளது.
இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிது. அதுபோல் தமிழக மக்களும் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டு நம் எதிர்ப்பை மத்திய, மாநில அரசுகளுக்குக் காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்தக் குடியுரிமைத் திருத்த சட்டத்தை (சிஏஏ) மட்டுமல்ல; தேசிய மக்கள்தொகை பதிவேட்டையும் (என்பிஆர்) நிறைவேற்றுவோம் என அறிவித்துள்ளது அதிமுக அரசு. அரசமைப்புச் சட்டத்துக்கும் மக்களுக்கும் விரோதமான இந்த இரு கருப்புச் சட்டங்களையும் பாஜக கூட்டணிக் கட்சி உள்ளிட்டவை ஆட்சியிலிருக்கும் மாநிலங்களே நிறைவேற்ற மாட்டோம் என்று அறிவித்திருக்கும் நிலையில், தமிழக அதிமுக அரசோ நிறைவேற்றுவோம் என்கிறது.
இதன் மூலம் அதிமுக அரசு பாஜகவுக்கு சேவகம் செய்யும் அடிமை அரசே தவிர தமிழக மக்களுக்கான அரசல்ல என்பதைக் காட்டிக்கொண்டுள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகளையும் அவற்றின் கருப்புச் சட்டங்களையும் எதிர்க்கும் வண்ணம் நாளை (30.01.2020) நடக்கவுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக மக்கள் அனைவரையும் அன்போடும் உரிமையோடும் அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications