தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படுகிறார் விஜயேந்திரர் - திருமாவளவன் ஆவேசம்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் விஜயேந்திரர் மன்னிப்பு கேட்காமல் தமிழக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் புகார்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை மன்னிப்பு கேட்காத விஜயேந்திரர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டிற்கு செல்லும் வழியில் திருத்தணி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், மீனவர்களுக்கு எதிராக கடல் எல்லை மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இலங்கை அரசுக்கு கண்டன் தெரிவித்தார்.

Vijayendrar acts against Tamil and Tamilians slams Thirumavalavan

மேலும் பேசிய அவர், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விவகாரத்தில் இதுவரை விஜயேந்திரர் மன்னிப்பு கேட்காமல் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படுவதாக திருமாவளவன் தெரிவித்தார். மேலும் அவர் மன்னிப்பு கேட்கும் வரை இந்த விவகாரத்தை தமிழ் அறிஞர்கள் விடமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

பின்னர் திருத்தணி தர்மராஜா கோயில் அருகில் உள்ள தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், இந்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அழுத்தம் கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+