பாரம்பரிய முறையிலும் நவீன முறையிலும் எண்ணெய் கழிவுகளை அகற்றுங்கள் - விஜயகாந்த்
பல ஆயிரம் டன் தென்னை நார்களை கடலில் கலந்துள்ள கழிவுகளின் மீது ஹெலிகாப்டர் மூலம் தூவி, எண்ணெய் கழிவுகளை நீக்கலாம்
சென்னை: சென்னை காமராஜர் துறைமுகம் அருகே கடந்த வாரம் இரண்டு கப்பல்கள் மோதிய விபத்தில் பல டன் எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்துள்ளன. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் எண்ணெய் கழிவுகளை வாளியில் அள்ளி வெளியேற்றி வருகின்றனர்.
நேற்று எண்ணூர் கடற்கரை பகுதிக்கு சென்று ஆய்வு செய்த விஜயகாந்த், எண்ணெய் கழிவை வாளியில் அள்ள கடல் என்ன கிணறா? என்று கேட்டார். இன்று எண்ணெய் கழிவுகளை அகற்ற ஐடியா ஒன்றையும் கொடுத்துள்ளார்.
கடலில் பரவியுள்ள எண்ணெய் படலங்களை நீக்குவது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை அறிக்கை:

எண்ணெய் கழிவுகள்
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் படலங்கள் பரவி இருக்கும் இடங்களை நேற்று நேரில் சென்று நான் ஆய்வு செய்தேன். தற்போது கரையோதுங்கியுள்ள எண்ணெய் கழிவுகளின் அளவு மொத்த பாதிப்பில் சிறுதுளியே.

அதிர்ச்சியடைந்தேன்
கடலில் பல கிலோ மீட்டர் தூரம் எண்ணெய் படலங்கள் பரவியுள்ள பரப்பளவின் பாதிப்பை காட்டும் அதிர்ச்சிகரமான புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
அதனடிப்படையில் கரையோரங்களில் மட்டுமல்லாது கடலின் நடுவில் எண்ணெய் கழிவுகள் மிகப்பெரிய அளவில் பரவியுள்ளது தெரியவந்துள்ளது.

உடனடி நடவடிக்கை
நிலைமையை உணர்ந்து இந்த விவகாரத்தில் வழக்கம்போல் பொறுமையையும் அமைதியையும் கடைபிடிக்காமல் வெளிநாடுகளில் இருந்து நவீன தொழில்நுட்ப கருவிகளை வரவழைத்து, எண்ணெய் கழிவுகளை முழுமையாக நீக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரவாமல் தடுக்க வேண்டும்
கடலையும்,அதில் வாழும் கடல்வாழ் உயிரினங்களையும், அதனை நம்பி வாழும் மீனவர்களையும் பாதுகாக்கவும், புதுச்சேரி,கடலூர் வரை பரவியுள்ள எண்ணெய் படலங்களை உடனடியாக அகற்றவும் மேலும் அது பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறேன்.

பாரம்பரிய முறை
நமது தமிழ்நாட்டின் பண்டையகால பாரம்பரிய முறைப்படி கழிவுகளை அகற்றுவதற்கு தென்னை நார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பல ஆயிரம் டன் தென்னை நார்களை கடலில் கலந்துள்ள கழிவுகளின் மீது ஹெலிகாப்டர் மூலம் தூவி, எண்ணெய் கழிவுகளை நீக்கலாம் என்ற யோசனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications