முதல்வரை மாற்றும் வரை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை.. தங்க தமிழ்ச்செல்வன் திட்டவட்டம்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றும் வரை ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டும் கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றும் வரை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சொகுசு விடுதியில் இருந்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வெளியேறியதாக வெளியான தகவல் தவறானது என்றார்.

நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால் 10 எம்எல்ஏக்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றதாகவும் அவர் கூறினார். மேலும் 25 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு எடப்பாடி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், சபாநாயகர் நோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில் எதற்காக தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் தினகரன் ஆதரவு எம்பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றும் வரை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்வரை மாற்றும் கோரிக்கை ஏற்கப்பட்டால் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications