மழை எவ்வளவு பெய்யும் என்பதை துல்லியமாக கணிக்க வசதி இல்லை... வானிலை மைய தலைமை இயக்குநர்
சென்னை: மழை எந்த அளவுக்குப் பெய்யும் என்பதை துல்லியமாக கணித்துக் கூற இதுவரை உலகில் எந்த இடத்திலும் தொழில்நுட்ப வசதி இல்லை என்று சென்னை வானிலை மைய தலைமை இயக்குநர் பாகுலேயன் தம்பி கூறியுள்ளார்.
மேலும் இந்த வட கிழக்குப் பருவ மழைக் காலத்தில் இயல்பை விட அதிக மழை பெய்ய 90 சதவீத வாய்ப்புகள் உள்ளன என்றுதான் தங்களது மையம் கூறியிருந்ததாகவும், ஆனால் அதை ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டு 90 சதவீத அதிக மழை பெய்யும் என்று கூறி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் தற்போது பெய்து வரும் மழையை யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த பெரு மழை தலைநகரையே பெரும் வெள்ளக்காடாக்கி விட்டது. மக்கள் அல்லோகல்லப்பட்டுப் போய் விட்டனர்.
இந்த நிலையில் துல்லியமாக மழை அளவைக் கணிக்கும் தொழில்நுட்பம் தற்போது இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

வசதி இல்லை
நீண்ட கால வானிலையை துல்லியமாக கணிக்கக்கூடிய தொழில்நுட்பம் இதுவரை வளரவில்லை. எங்கும் அந்த அளவுக்கு யாரும் துல்லியமாக கணிக்க முடிவதில்லை.

நாங்கள் சொன்னது இதுதான்
2015-ம்ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான அளவுக்கு மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்பு என்று இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்தது.

தவறாக புரிந்து கொண்டு விட்டனர்
ஆனால் அதை தவறாக புரிந்து கொண்டு இயல்பான அளவை விட 90 சதவீதம் அதிகமாக பெய்யும் என்று ஊடகங்களில் கூறி விட்டனர்.

சரியாகச் சொல்லுங்கள்
எனவே இப்படியான தவறான தகவல்களை மக்களுக்குத் தரக்கூடாது. வானிலை மைய அதிகாரிகள் சொல்லும் தகவல்களை நன்றாக புரிந்து கொண்டு பிரசுரியுங்கள் என்றார் தம்பி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications