இளையராஜா-எஸ்.பி.பி ராயல்டி விவகாரம் பின்னணியில் இதுவும் ஒரு காரணமா?
40 ஆண்டுகளாக இனிமையான இசைப் பாடல்களை தந்த இளையராஜாவும், எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் நட்பில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு ராயல்டி மட்டும் காரணம் அல்ல.
சென்னை: 40 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இளையராஜாவும், எஸ்பி பாலசுப்பிரமணியமும் பிரிந்து இருப்பதற்கு காரணம் எஸ்.பி. பாலசுப்பிரணியத்தின் செயல்பாடு என்று கூறப்படுகிறது.
இருவரும் இணைந்து காலத்தால் அழியாத நல்ல இனிமையாக பாடல்களைக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தன் பாடல்களை இசைக் கச்சேரிகளில் பாடக் கூடாது என்ற எஸ்பிபி உள்ளிட்டோருக்கு இளையராஜா வச்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

எஸ்பிபி 50
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை கச்சேரிகள் நடத்திவருகிறார். கனடா, ரஷியா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டு தற்போது அமெரிக்காவில் கச்சேரி நடத்துவதற்காக உள்ளார்.

வக்கீல் நோட்டீஸ்
இந்த நிலையில்தான் அவருக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி தனது பாடல்களை மேடைகளில் பாட தடை விதித்து இருக்கிறார். இதை அறிந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் தனது பேஸ்புக் பக்கத்தில் தாம் இனி இளையராஜாவின் பாடல்களை பாடப் போவது இல்லை என்று தெரிவித்தார்.

பெரிதுப்படுத்த வேண்டாம்
காதும் காதும் வச்சமாதிரி அனுப்பிய வக்கீல் நோட்டீஸை இவராகவே பேஸ்புக்கில் தெரிவித்துவிட்டு தற்போது இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று கூறி இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி வருகிறார். இளையராஜாவின் செயல்பாட்டை மேலோட்டமாக பார்த்தோமேயானால் தவறு உள்ளது போல இருக்கும். ஆனால் அதில் உள்ளதை ஆராய்ந்தால் மட்டுமே உண்மை விளங்கும்.

கோடிக்கணக்கில் பணம்
இளையராஜாவின் பாடல்களை டிஜிட்டல்மயமாக்கும் சில முன்னணி நிறுவனங்கள் அதில் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். ஆனால் இளையராஜாவுக்கு அதிலிருந்து ராயல்டி செல்வதே இல்லை என்று கூறப்பட்டது.

இதுதான் காரணமா?
கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள 7 நகரங்களி்ல் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக எஸ்பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட முன்னணி பாடகர்களை இளையராஜா அணுகினார். ஆனால் அதற்கு பெரும் தொகையை எஸ்பிபி கேட்டதாக கூறப்படுகிறது.

எஸ்பிபி செல்லவில்லை
அவர் கேட்ட அந்த தொகையை இளையராஜா அளிக்காததால் எஸ்பிபி அமெரிக்காவுக்கு செல்லவில்லை. பின்னர் வேறு சில பாடகர்களை அழைத்து சென்று இளையராஜா இசைக் கச்சேரி நடத்தினார். இந்த பிரச்னையை மனதில் வைத்து அமெரிக்காவில் எஸ்பிபி இசைக் கச்சேரி நடத்த இருந்த நேரத்தில் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களை பாடக் வேண்டாம் என்று எஸ்பிபி, அவரது மகன் சரண், பாடகி சித்ரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதை எஸ்பிபி ஊதி பெரிதாக்கிவிட்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications