ராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் கோபாலிடம் ஏன் விசாரிக்கவில்லை.. நீதிமன்றம் கேள்வி
Recommended Video

ஈரோடு: நடிகர் ராஜ்குமாரை, சந்தன மரக் கடத்தல் மன்னன் வீரப்பனிடம் இருந்து மீட்க பேச்சுவார்த்தை நடத்திய அரசு குழுவில் இடம் பெற்றிருந்த, 'நக்கீரன்' கோபால் உள்ளிட்டோரை ஏன் விசாரிக்கவில்லை என்று கோபி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெங்களூரில் இருந்து தாளவாடிக்கு மனைவி பார்வதம்மாவுடன் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவர் கூட்டாளிகளால் கடத்தப்பட்டதாகவும், நூறு நாட்களுக்கு பிறகு விடுதலை செய்ததாகவும், வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் மீது கோபி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இன்று நீதிபதி மணி தீர்ப்பு வழங்கினார்.

அப்போது, போலீஸ் தரப்பு இந்த வழக்கை மெத்தனமாக கையாண்டதாக சரமாரியாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.
ராஜ்குமார், அவர் மனைவி பார்வதம்மா ராஜ்குமாரிடம் ஏன் சாட்சியம் பெறவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசு சார்பில் வீரப்பனிடம் தூதுவர்களாகச் சென்ற நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால், பழ.நெடுமாறன், புதுச்சேரி சுகுமாறன், மனித உரிமை ஆர்வலர் கல்யாணி ஆகியோர் தூது சென்றனர்.

தூதுவர் பணிக்காகச் செல்லும் தங்கள்மீது எதிர்காலத்தில் தமிழக காவல் துறையும், கர்நாடகக் காவல் துறையும் வீரப்பனைச் சந்தித்துப் பேசுவது தொடர்பான எந்த வழக்கும் போடக் கூடாது என்பது இவர்கள் அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து எழுப்பிய கோரிக்கை. அப்போது இரு மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் கையொப்பமிட்டு வாக்குறுதியை அளித்தனர்.
இந்த நிலையில்தான், நக்கீரன் கோபால் உள்ளிட்ட தூது செல்வோர் அனைவரிடமும் விசாரணை நடைபெற்றதா என்று இன்று கோர்ட் கேள்வி எழுப்பியது. அவர்களிடம் போலீசார் விசாரிக்கவில்லை என்பதை தீர்ப்பில் நீதிபதி சுட்டிக் காட்டினார். காவல்துறை மெத்தனமாக நடந்து கொண்டதாக அதில் கூறப்பட்டிருந்தது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications