For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் டார்ச்சர் தாங்க முடியலை.. பெண்களுடன் தொடர்பு.. சித்ரவதை செய்றாரு.. எஸ்ஐ மீது மனைவி புகார்

சப் இன்ஸ்பெக்டர் மீது மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "என்னால பிரபாகரன் தரும் டார்ச்சர்களை தாங்க முடியவில்லை.. அவர் திருந்தவே இல்லை.. சித்ரவதை செய்கிறார்... அவருக்கு சில பெண்களுடன் பழக்கம் உள்ளது.. அதனால் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எஸ்ஐ மீது மனைவி புகார் அளித்துள்ளார்.

சென்னை வேப்பேரியை சேர்ந்தவர் பானுரேகா.. இவர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் புகார் ஒன்றை தந்தார். அதில் தன் கணவன் மீது குற்றஞ்சாட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன் சுருக்கம் இதுதான்: "எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என் முன்னாள் கணவர் பிரபாகரன்.. காசிமேடு ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார்... நான் பிஇ இன்ஜினீயரிங் படித்துள்ளேன்.. 1993-ம் ஆண்டு பிஇ படித்து முடித்தபோதுதான் பிரபாகரனுக்கு போலீசில் வேலை கிடைத்தது.

ஆறுதல்

ஆறுதல்

அப்போதுதான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது.. 1994-ல் திருமணம் செய்துகொண்டோம். நன்றாக போய்க் கொண்டிருந்த எங்கள் வாழ்வில், பிரபாகரன் குடும்பத்தினரிடமிருந்து எனக்கும், என் குடும்பத்துக்கும் மிரட்டல்கள் வந்தன. ஆறுதலாக இருந்த பிரபாகரன், ஒரு கட்டத்தில், என் சம்பளத்தை கேட்க தொடங்கினார். நாளுக்கு நாள் அவரது தொல்லைகள் அதிகமாயின

பிரபாகரன்

பிரபாகரன்

அதனால் எனக்கு இன்னொரு கல்யாணம் செய்ய வீட்டில் முடிவு செய்தனர்.. அதன்படி 1995-ல் எனக்கு கல்யாணம் ஆனது.. ஒரு பெண் குழந்தை ஆனால், எனக்கும் பிரபாகரனுக்கும் நடந்த திருமண பதிவுச் சான்றிதழ்களை சீனிவாசனிடம் காட்டியதால், அவவர் என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். கைக்குழந்தையுடன் தவித்தேன்.

திருமண சான்றிதழ்

திருமண சான்றிதழ்

பிறகு முருகானந்தம் என்பவரை 1999-ல் கல்யாணம் செய்தேன்... எங்களுக்கு 2000-ல் ஆண் குழந்தை பிறந்தது. முருகானந்தத்திடமும் பிரபாகரன் திருமண சான்றிதழை காட்டினார்.. மிரட்டலும் விடுக்கவே முருகானந்தமும் பிரிந்து சென்றுவிட்டார்.. இப்போது 2 குழந்தைகளுக்காக உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். 2017-ல் உறவினர் திருமணத்துக்காக சென்னைக்கு வந்தபோது, பிரபாகரனும் அங்கு வந்திருந்தார்.

திருந்தவில்லை

திருந்தவில்லை

தன்னை மன்னித்துவிடும்படி என் காலில் விழுந்து கெஞ்சினார்... அவரின் நடிப்பைப் பார்த்து நானும் மனமிறங்கினேன்.. பெங்களூரிலிருந்து சென்னை வந்து அவருடன் குடும்பம் நடத்தினேன். ஆனால் அவர் திருந்தவே இல்லை.. வீட்டுக்கு மதுபோதையில்தான் வருவார். நகை, பணம் கேட்டு சித்ரவதை செய்வார். பிரபாகரனின் டார்ச்சர் தாங்க முடியாமல் புகார் தந்தேன்.. அவருக்கு சில பெண்களுடன் பழக்கம் இருப்பது தெரியவந்தது. அதனால் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஆனால், பானுரேகாவின் குற்றச்சாட்டை பிரபாகரன் மறுத்துள்ளதாக தெரிகிறது.. இதை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் கூறப்படுகிறது.. எனினும் இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் மாறி மாறி தெரிவிக்கப்பட்டு வருவதால், போலீசார்தான் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

English summary
wife filed complaint against chennai police sub inspector
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X