ஏற்காடு இடைத் தேர்தல்- சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!
சேலம்: ஏற்காடு சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

வேட்பு மனுத் தாக்கல்
ஏற்காட்டில் டிசம்பர் 4-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது, இந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் நவம்பர் 9-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள், நவம்பர் 16-ந்தேதியாகும்.

வேட்பு மனு பரிசீலனை
நவம்பர் 18-ந்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் நவம்பர் 20-ந்தேதி.

வாக்குப் பதிவு
டிசம்பர் 4-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெறும். டிசம்பர் 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

நடத்தை விதிகள் அமல்
இதையடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் விதிமுறையின் படி உள்ளாட்சி அலுவலகங்களில் உள்ள முதல்வர் படம் அகற்றப்படுகிறது.

கட்டுப்பாடுகள்
சுவர் ஒட்டிகள், விளம்பர பேனர்கள் மற்றும் கட்டவுட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கார்களும் திரும்பப்பெறப்படுகின்றன. இதையடுத்து, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications