Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

17 வயசு பையன்.. பொள்ளாச்சியையே நடுங்க வைத்த 19 வயது பெண்.. முதல்முறையாக போக்சோவில் கைதான கொடுமை

17 வயது சிறுவனை கடத்தி திருமணம் செய்த இளம்பெண் கைதானார்

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி: 17 வயது சிறுவனுக்கு 19 வயது பெண் பாலியல் டார்ச்சர் தந்துவிட்டாராம்.. இதையடுத்து, இந்த இளம்பெண்ணை முதல்முறையாக போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் அந்த சிறுவன்.. 12-ம் வகுப்பு படிக்கிறார்.. இதே பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் யமுனா.. 19 வயதாகிறது..!

ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தவர் யமுனா.. அந்த பெட்ரோல் பங்குக்கு தன்னுடைய டூவீலருக்கு பெட்ரோல் போட செல்வாராம் அந்த சிறுவன்.. அப்போதுதான் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. 2 பேரும் செல்போன் நம்பரை வாங்கி வைத்து கொண்டு, அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

திருமணம்

திருமணம்

இந்நிலையில் ஒருநாள் யமுனா, அந்த சிறுவனிடம் காதலிப்பதாக சொல்லி உள்ளார்.. மேலும் அந்த சிறுவனை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது... அப்படித்தான், கடந்த 26ம் தேதி யமுனா, சிறுவனை கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழனிக்கு அழைத்து போய்விட்டார்.. அங்கு அவரை கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைத்துள்ளார்.. அதற்கு பிறகு சிறுவனை, கோவை செம்மேடு பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.. அங்கிருந்த ஒரு கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்..

பலாத்காரம்

பலாத்காரம்

அப்போது, யமுனா, சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது... இதனிடையே சிறுவனின் பெற்றோர், மகனை காணாமல் எங்கெங்கோ தேடி உள்ளனர்.. இறுதியில் அந்த சிறுவனே வீடு வந்து சேர்ந்துள்ளான்.. நடந்ததை எல்லாம் பெற்றோரிடம் சொல்லவும், அதிர்ந்து போன பெற்றோர், பொள்ளாச்சி மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்திருக்கிறார்கள்.. பின்னர், யமுனாவிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்..

 குடல் இறக்க நோய்

குடல் இறக்க நோய்

அப்போதுதான், சிறுவனை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. அதுமட்டுமல்ல, சிறுவனுக்கு குடல் இறக்க நோய் பாதிப்பு இருந்திருக்கிறது.. இதற்காக, சிறுவன் சிகிச்சையை எடுத்து வந்துள்ளான்.. அப்போதுதான் சிறுவனை மருத்துவமனையில் சந்தித்து, திருமண பேச்சை எடுத்துள்ளார் யமுனா.. சிறுவன் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்.. ஆனால் யமுனாதான், சிறுவனை கட்டாயப்படுத்தி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

யமுனா

யமுனா

இப்போது யமுனா கைதாகி உள்ளார்.. முதல்முறையாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்... சிறுவன் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்... பொள்ளாச்சி என்றாலே அந்த பிஞ்சுகளின் கதறல் இப்போது வரை நினைவுக்கு வரும் நிலையில், ஒரு இளம்பெண்ணே சிறுவனை கடத்தி சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+