17 வயசு பையன்.. பொள்ளாச்சியையே நடுங்க வைத்த 19 வயது பெண்.. முதல்முறையாக போக்சோவில் கைதான கொடுமை
17 வயது சிறுவனை கடத்தி திருமணம் செய்த இளம்பெண் கைதானார்
பொள்ளாச்சி: 17 வயது சிறுவனுக்கு 19 வயது பெண் பாலியல் டார்ச்சர் தந்துவிட்டாராம்.. இதையடுத்து, இந்த இளம்பெண்ணை முதல்முறையாக போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் அந்த சிறுவன்.. 12-ம் வகுப்பு படிக்கிறார்.. இதே பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் யமுனா.. 19 வயதாகிறது..!
ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தவர் யமுனா.. அந்த பெட்ரோல் பங்குக்கு தன்னுடைய டூவீலருக்கு பெட்ரோல் போட செல்வாராம் அந்த சிறுவன்.. அப்போதுதான் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. 2 பேரும் செல்போன் நம்பரை வாங்கி வைத்து கொண்டு, அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

திருமணம்
இந்நிலையில் ஒருநாள் யமுனா, அந்த சிறுவனிடம் காதலிப்பதாக சொல்லி உள்ளார்.. மேலும் அந்த சிறுவனை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது... அப்படித்தான், கடந்த 26ம் தேதி யமுனா, சிறுவனை கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழனிக்கு அழைத்து போய்விட்டார்.. அங்கு அவரை கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைத்துள்ளார்.. அதற்கு பிறகு சிறுவனை, கோவை செம்மேடு பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.. அங்கிருந்த ஒரு கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்..

பலாத்காரம்
அப்போது, யமுனா, சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது... இதனிடையே சிறுவனின் பெற்றோர், மகனை காணாமல் எங்கெங்கோ தேடி உள்ளனர்.. இறுதியில் அந்த சிறுவனே வீடு வந்து சேர்ந்துள்ளான்.. நடந்ததை எல்லாம் பெற்றோரிடம் சொல்லவும், அதிர்ந்து போன பெற்றோர், பொள்ளாச்சி மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்திருக்கிறார்கள்.. பின்னர், யமுனாவிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்..

குடல் இறக்க நோய்
அப்போதுதான், சிறுவனை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. அதுமட்டுமல்ல, சிறுவனுக்கு குடல் இறக்க நோய் பாதிப்பு இருந்திருக்கிறது.. இதற்காக, சிறுவன் சிகிச்சையை எடுத்து வந்துள்ளான்.. அப்போதுதான் சிறுவனை மருத்துவமனையில் சந்தித்து, திருமண பேச்சை எடுத்துள்ளார் யமுனா.. சிறுவன் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்.. ஆனால் யமுனாதான், சிறுவனை கட்டாயப்படுத்தி கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

யமுனா
இப்போது யமுனா கைதாகி உள்ளார்.. முதல்முறையாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்... சிறுவன் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்... பொள்ளாச்சி என்றாலே அந்த பிஞ்சுகளின் கதறல் இப்போது வரை நினைவுக்கு வரும் நிலையில், ஒரு இளம்பெண்ணே சிறுவனை கடத்தி சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications