பலாத்கார முயற்சியால் வேதனை.. பள்ளி மாணவி தற்கொலை... இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரியில் பள்ளி மாணவியிடம் எல்லை மீறி நடந்த வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த காரமடைகாரர் என்பவரது மகன் சரவணன். இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதியன்று தனது வீட்டருகே வசிக்கும் பள்ளி மாணவியை அழைத்துக்கொண்டு வந்து அவரிடம் எல்லை மீறி நடந்துகொண்டதுடன் பாலியல் பலாத்கார முயற்சியும் செய்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அம்மாணவி 17 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Youngster jailed for made a girl passes away

அவரது உறவினர்கள் முயற்சியால் மாணவி கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர், போலீசார் அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சோலுார் மட்டம் போலீசார் சரவணனை கைது செய்தனர். இந்த நிலையில் அந்த மாணவி மரணமடைந்தார்.

இது தொடர்பான வழக்கு ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று, இதற்கான தீர்ப்பை நீதிபதி சர்வமங்களா வழங்கினார். அதில், குற்றவாளி சரவணனுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி அந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+