கோயம்பேட்டில் பயங்கரம்.. வாலிபர் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னலில் கழுத்து அறுத்து வாலிபர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு பஸ் நிலைய நுழைவுவாயில் எதிரே சிக்னல் உள்ளது. நேற்றிரவு சிக்னலுக்காக ஏராளமான வண்டிகள் காத்திருந்தன. அப்போது சிக்னலையொட்டி உள்ள சென்டர் மீடியன் பகுதியில் ரத்தவெள்ளத்தில் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் .சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு, ரோட்டின் ஓரமாக வைத்துவிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனிடையே அந்த வாலிபர் உயிரிழந்தார். இதையடுத்து, உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். வாலிபரின் பின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டுள்ளது. உடல் முழுவதும் காயங்கள் உள்ளது. எனவே, அவரை கொலை செய்து வீசியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
அவரது சட்டை பாக்கெட்டில் 20 ரூபாயும் கஞ்சா பொட்டலமும் இருந்தது. பேன்ட், சட்டை அணிந்துள்ளார். கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததால் கஞ்சா வியாபாரியாக இருக்கலாம். தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று விசாரிக்கின்றனர். பரபரப்பு மிகுந்த கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications