கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட.. 3 பேர்.. மயங்கி விழுந்ததால்.. தஞ்சையில் பரபரப்பு!
தஞ்சையில் 3 பேர் திடீர் மயக்கம் அடைந்துவிட்டனர்
தஞ்சை: தஞ்சையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்கள பணியாளர்கள் 3 பேர் திடீர் மயக்கமடைந்துள்ளனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று நம் நாட்டில் முழுவதுமாக குறையவில்லை.. மாறாக, தொற்று அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.. எனவே, கடந்த ஜனவரி 16-ம் தேதியில் இருந்து இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி ஆரம்பமானது.

இதற்காக முதல் கட்டமாக டாக்டர்கள், நர்ஸ்கள் சுகாதார பணியாளர்களுக்கு முறையான வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி போடப்பட்டது. இதற்கு பிறகு, 2-வது தவணையாக, அதாவது 28 நாட்களுக்கு பிறகு, மறுபடியும் 'டோஸ்' செலுத்த முடிவு செய்யப்பட்டது... அதன்படி, ஏற்கனவே தடுப்பூசி போட்டுகொண்ட சுகாதார பணியாளர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதில், மொத்தம் 3, 126 சுகாதார பணியாளர்களுக்கு இன்று 2வது 'டோஸ்' தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பமானது.. அதன்படி, 220 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது... தஞ்சை மெடிக்கல் காலேஜில் தடுப்பூசி போட்டு கொண்ட 3 பேருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது.. இதனால், அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.. தீவிர சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மயக்கமடைந்த தகவல் பெரும் அதிர்ச்சியை தஞ்சையில் உண்டுபண்ணி வருகிறது.. இதனிடையே, சிகிச்சை பெற்று வரும் 3 பேரிடமும் மருத்துவ கல்லூரி முதல்வர் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
எதற்காக 3 பேர் மயங்கி விழுந்தனர் என்று தெரியவில்லை.. ஆனால், இன்னைக்கு 2வது டோஸ் போட்டு கொள்ள வேண்டாமென்று கேட்டு கொண்டனராம்.. அதையும் மீறி மருத்துவ கல்லூரி நிர்வாகம்தான் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக ஊசியை போட்டதாக பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.












Click it and Unblock the Notifications