தேனியில் உள்ள காப்பகத்தில் என்ன நடந்தது.. குழந்தைள் குறித்து பரவும் வீடியோ குறித்து வெளியான விளக்கம்
தேனி: தேனியில் ஜெ.ஜெ.ப்ரோடிஜீஸ் என்ற பெயரில் குழந்தைகளுக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை ஜெனிபர் என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு தேனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை விட்டு செல்வார்கள். இந்நிலையில் காப்பக பெண் ஊழியர்கள் குழந்தைகளுடன் விளையாடிய வீடியோ குறித்து தவறான தகவல்கள் பரவிய நிலையில், அந்த காப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
தேனி நகராட்சிக்கு உட்பட்ட சிதம்பரனார் தெருவில் ஜெ.ஜெ.ப்ரோடிஜீஸ் என்ற பெயரில் குழந்தைகளுக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை ஜெனிபர் என்பவர் நிர்வகித்து வருகிறார்.

தேனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை இங்கு வந்து விட்டுவிட்டு, மாலை நேரத்தில் வேலை முடிந்து திரும்பும்போது தங்கள் குழந்தைகளை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். இங்குள்ள நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் குழந்தைகளை பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுமார் 1.5 வயது உள்ள குழந்தையை குப்பை தொட்டியில் போட்டு காப்பகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அந்தக் குழந்தையை குப்பைத்தொட்டியில் விளையாடுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தையை துன்புறுத்துவது போன்ற காட்சிகள் வெளியாகியதால், இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் இது குறித்து குழந்தைகள் காப்பகத்திற்கு சென்ற குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அங்கிருந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே வீடியோவானது கடந்த நான்கு மாதங்கள் முன்பு எடுக்கப்பட்ட வீடியோவை சிலர் வேண்டுமென்னே தவறான நோக்கத்துடன் எடிட் செய்து பரப்புவதாகவும், குழந்தைகைக்கு எந்த ஒரு துன்புறுத்தலும் நடக்கவில்லை என்றும் அந்த குழந்தை நன்றாகவே இருப்பதாகவும் காப்பக ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications