விடாத காவல்துறை.. நெல்லையில் சீட் பெல்ட் போடாத அரசு பஸ் டிரைவர்களை மடக்கி ஃபைன் போட்ட போலீசார்
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என்று கூறி அரசு பேருந்து ஓட்டுனர்கள் 3 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அரசு பேருந்தில் பயணித்த காவலர் ஆறுமுகப்பாண்டி, பஸ்சில் டிக்கெட் எடுக்க மாட்டேன் என்று கூறும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. "தானும் ஒரு அரசு ஊழியர் தான். டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது" என கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தார்.

இதையடுத்து, போக்குவரத்து துறையில் இருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 'அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி கிடையாது. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் போலீசார் டிக்கெட் எடுத்துதான் பயணிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்து இருந்தது.
அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் காவலர் பயணித்தது சர்ச்சையான நிலையில், தற்போது நோ பார்க்கிங், அதிக பயணிகளை ஏற்றியது என அரசு பேருந்து டிரைவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தான் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என்று கூறி அரசு பேருந்து ஓட்டுனர்கள் 3 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெள்ளத்துரை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து அபராதம் விதித்து வந்துள்ளார். அப்போது அரசு பேருந்தை மறித்த அவர் சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி ரூ.500 அபராதம் விதித்தார். இதேபோல் மேலும் 2 அரசு பேருந்து டிரைவர்களிடம் சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என்று கூறி தலா ரூ.500 அபராதம் விதித்துள்ளார்.
முன்னதாக நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக அரசு பேருந்து டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றார்கள். நேற்று சென்னை தாம்பரத்தில் அரசு பேருந்து டிரைவருக்கு போக்குவரத்து போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதேபோல், நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் விதி மீறலில் ஈடுபட்ட அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதிக பயணிகளை ஏற்றி வரும் பேருந்துகளுக்கும் சில இடங்களில் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வந்த மற்றொரு அரசு பேருந்துக்கு பார்க்கிங் பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அதுமட்டுமின்றி ஓட்டுநர், நடத்துநர் சீருடை முறையாக அணிந்துள்ளனரா? என்று சோதனை செய்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் சொலப்பட்டாலும், இத்தனை நாட்கள் இன்றி திடீரென்று இப்படி, போலீசார் கெடுபிடி காட்டுவது குறித்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications