Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு வெளியேறிய தொழிலாளர்கள்.. 100 ஆண்டு பந்தம் முடிவுக்கு வந்தது

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், மாஞ்சோலை மலைகளில் இருந்து விடைபெற்றார்கள். ஏராளமானோர் ஏற்கனவே வெளியேறிவிட்ட நிலையில், மீதமுள்ள மக்களும் வீடுகளை காலி செய்து வெளியேறி வருகிறார்கள். மலைகளில் 100 ஆண்டுகளாக பல தலைமுறைகளாக வேலை செய்து வரும் அவர்கள், எஸ்டேட் நிலத்தில் தனியார் நிறுவனத்தின் 99 ஆண்டு குத்தகை காலம் விரைவில் முடிவடைவதால், சமவெளிகளுக்கு செல்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு 2,000-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வந்தார்கள். இறுதியாக சுமார் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார்கள். மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு என நான்கு இடங்களில் தேயிலை எஸ்டேட்கள் இருந்தாலும் மாஞ்சோலை என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது.

Tirunelveli Manjolai nellai

சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடம் 1929-ம் ஆண்டு 'தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த குத்தகை காலம் வரும் 2028-ம் ஆண்டு நிறைவடைகிறது. ஆனால் மேற்கொண்டு குத்தகை நீட்டிக்கப்படவில்லை.. ஏனெனில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட் அமைந்திருப்பதால், வரும் 2028-ம் ஆண்டுக்குள் வெளியேறுமாறு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் காரணமாக தேயிலை தோட்டத்திற்கு ஒப்பந்தத்தை நீட்டிக்க தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் விரும்பவில்லை..அத்துடன் தேயிலை பயிர்களை பயிரிடுவதை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறவும் முடிவு செய்தது. அதற்காக அங்குள்ள தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வில் செல்லுமாறு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் பலரும் விருப்ப ஓய்வு விண்ணப்பங்களை பெற்று கையெழுத்திட்டு விடைபெற்றனர். அதேநேரம் குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்னரே பிபிடிசி நிறுவனம் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்ற தொடங்கியது.

Tirunelveli Manjolai nellai

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம். அங்கு வாழ்ந்து வந்த 700 குடும்பங்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டது.இதனிடையே மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசு ஏற்று நடத்தக் கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து மாஞ்சோலை தொழிலாளர்கள் ஏராளமானோர் கடந்த ஆண்டு வெளியேறினார்கள்.

Tirunelveli Manjolai nellai

இதனிடையே 100 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மண்ணை விட்டு வெளியேற மனம் இன்றி இன்னும் சிலர் அங்கேயே தங்கியிருக்கிறார்கள். அவர்களும் தற்போது வெளியேற தொடங்கி உள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக பி.பி.டி.சி நிர்வாகம் ஆலையை மூடிவிட்டால் தேயிலைப் பறிக்கும் தொழில் அவர்களுக்கு கிடைக்கவில்லை . இதனால் வாழ்வாதாரம் தேடி சமவெளிப்பகுதிக்கு அவர்கள் செல்ல தொடங்கி உள்ளார்கள். பல கனவுகளுடன் 100 ஆண்டுகள் வாழ்ந்த அவர்கள், இப்போது அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். பிறந்த மண்ணை விட்டு நிரந்தரமாக பிரிந்து செல்வது என்பது கவலைக்குரியது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tirunelveli Manjolai nellai
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+