உமா மகேஸ்வரி கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு அதிரடி மாற்றம்!
உமா மகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
நெல்லை: கொலையாளியை நெல்லை மாநகர போலீசார் கைது செய்த நிலையில், முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 23-ம் தேதி நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் முருகசங்கரன், வேலைக்கார பெண் மாரி ஆகியோர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இது நெல்லை உட்பட திமுக தரப்பில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளிகளை உடனே பிடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவிக்கவும் இந்த பரபரப்பு அதிகமானது.
இதனிடையே, 3 நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர், திடீரென உமா மகேசுவரி வீட்டுக்குள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கொலையாளிகள் விழுந்த கிடந்த இடங்களை போட்டோவும் எடுத்துக் கொண்டு அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்துவிட்டு கிளம்பி சென்றனர்.
நெல்லை போலீசார் விசாரித்து வரும் நிலையில், திடீரென சிபிசிஐடி போலீசார் இந்த விசாரணையில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவேளை இந்த வழக்கு சிபிஐடிக்கு மாற்றப்பட்டுவிட்டதா என்ற கேள்வியும் எழுந்தது. எனினும், நாங்களே குற்றவாளியை கைது செய்வோம் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உறுதி தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஒரு துப்பும் கிடைக்காத நிலையில், இந்த 6 நாட்களுக்குள் கொலையாளியை போலீசார் அதிரடியாக கைது செய்து வாக்குமூலத்தையும் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications