தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டும் மழை... வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி
நெல்லை: கோடை வெயில் வறுத்தெடுத்து வந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மூன்றாவது நாளாக இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் சாரல் மழை பெய்வதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சில மாவட்டங்களில் நேற்று இரவு முதலே விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின் படி இன்னும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகர், சாத்தூர், டெல்டா பகுதிகளான திருவாரூர் சுற்றுவட்டார பகுதி மற்றும் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.
இதனிடையே நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகேயுள்ள சின்னாளகம்பை என்ற கிராமத்தில், பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது வெட்டிய மின்னல் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாலை வசதி இல்லாததால் அவர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மாலை முதல் மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications