தயவு செஞ்சு அந்த பிச்சை காசை வாங்காதீங்க.. வாக்காளர்களுக்கு திவாகரன் கோரிக்கை

பிச்சை காசு வாங்கி ஓட்டு போடாதீங்க என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருத்துறைப்பூண்டி: "500, 1000 ரூபாய் வாங்கிக்கிட்டு வாக்களிப்பது என்பது மக்கள் வாழ்க்கையையே பணயம் வைப்பது போன்றது... அதனால் தயவு செய்து அந்த பிச்சைக்காசு வாங்காதீங்க" என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.

திருத்துறைப்பூண்டியில் அண்ணா திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது:

தேர்தலுக்கு பிறகு அமைகின்ற அரசு லஞ்சம் ஊழலற்ற அரசாக அமைய வேண்டும். தேர்தல் சமயத்தில் செய்யப்படும் ரெய்டு எல்லாம் ஒரு மாயைதான். மேகதாது அணை கட்டுவதற்கு அதிமுக பிரமுகர்களே மணல் அடித்து தருகிறார்கள்.

Divakaran slams ADMK Govt in Thiruthuraipoondi

ஓட்டுக்கு 500, 1000 ரூபாய் வாங்கிக்கிட்டு ஓட்டளிப்பது என்பது மக்கள் வாழ்க்கையை பணயம் வைப்பது போன்றது. தயவு செய்து அந்த பிச்சைக்காசை வாங்காதீங்க.

தமிழ்நாட்டில் பாலியல் தொந்தரவு இதுவரை இந்த அளவுக்கு இருந்ததில்லை. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதுக்கு காரணம் ஒரு அமைச்சரின் மீது பாலியல் குற்றச்சாட்டு ஏற்பட்டதுதான். ஆனால் அதையும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அதை யாரும் முடித்து வைக்கவும் இல்லை.

அமைச்சர் மீது விசாரணை நடத்தினால்தானே தவறு செய்பவர்கள் பயப்படுவார்கள்? அதனால்தான் இப்போ நிறைய இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் நடந்துகொண்டிருக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+