சட்டசபை உள்ளே வேளாண் தனி பட்ஜெட்.. வெளியே நிலத்தில் ரியல் எஸ்டேட் லேஅவுட்.. எகிறி அடிக்கும் கருணாஸ்
திருச்சி: தமிழக சட்டசபையில் வேளாண்மை துறைக்கென தனிபட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில் வெளியே ரியல் எஸ்டேட்டுக்கான லே அவுட் போடப்பட்டு வருவதாக முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அக்ரி எக்ஸ்போ 2023 எனும் வேளாண் கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த வேளாண் கண்காட்சியை நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய போது அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் மரபுவழி விவசாயம் பின்பற்றப்படுகிறது. ஆனால் மரபு வழி விவசாயத்தை முதல்முதலில் பின்பற்றியது தமிழ்நாட்டில்தான். ஆனால் அந்த நாட்டில் மரபுவழி விவசாயம் முழுமையாக பின்பற்றப்படவில்லை.
இந்திய அளவில் கர்நாடகா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளே பாரம்பரிய விவசாயத்தை முன்னிலைப்படுத்துகிறது. நான் விவசாயியாக மாறியது, ஒரு விபத்து, என் அம்மா, அப்பா எதையும் எனக்காக சேர்த்து வைக்கவில்லை. ஆனால் அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னை ஆரோக்கியமாக பெற்றெடுத்ததற்கு என்றும் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.
மரபு வழி விவசாயத்தை நம் நாடும், தமிழகமும் முழுவதுமாக பின்பற்ற வழிவகை செய்ய வேண்டும். இந்த மரபு சார்ந்த பாரம்பரிய இயற்கை விவசாயத்தை முன்னிலைப்படுத்த வேண்டும். அதனை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும். தற்போதுள்ள காலத்தில் தமிழகத்தில் மதுப்பழக்கம் அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளது. ஒரு புறம் மது விற்பனை செய்தாலும் அதை வாங்கி குடிப்பதற்காகவாவது அவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
எனவே தமிழக அரசு மரபு சார்ந்த இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். நமது மாநில அரசு மது என்னும் நஞ்சை தாராளமாக கொடுக்கும் போது நஞ்சில்லா உணவையும் தாராளமாக வழங்க வேண்டும். சட்டசபையில் விவசாயத்திற்கு என பட்ஜெட் போடப்படுகிறது. வெளியே விவசாய நிலத்தில் லே அவுட் போடப்படுகிறது. அதனை மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.
திட்டம் போடுகிற அதிகாரிகளும் அதை கட்டுப்படுத்துகிற அமைச்சர்களும் அவர்களை வழிநடத்தக் கூடிய முதல்வரும்தான் யோசிக்க வேண்டும். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என அவர்களுக்கு தெரியும். நான் சொன்னால் அதில் மாற்றம் வரபோகிறதா? அல்லது குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யப் போகிறார்களா?
15 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலுக்கு செல்லும் போது அங்கிருந்த நிலங்கள் பழங்குடியினரின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் இன்று வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியாவில் கேரளாதான் இயற்கையை விட்டுக் கொடுக்காமல் உள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள்தான் காரணம். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நம்மாழ்வார் வர வேண்டும் என கருணாஸ் பேசியிருந்தார்.
-
7 முறை போட்டி.. 5 முறை வெற்றி! சொந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கிராப் என்ன! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா!












Click it and Unblock the Notifications