Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் பேசும் போது ஏன் யாரும் கைதட்டவில்லை? என்ன தயக்கம் உங்களுக்கு? திருநாவுக்கரசர் வருத்தம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: நான் பேசும் போது ஏன் யாரும் கைதட்ட மாட்டேன் என்கிறீர்கள் என்று வருத்தப்பட்ட திருநாவுக்கரசர் எம்.பி. என்ன தயக்கம் உங்களுக்கு என கூட்டத்தில் இருந்த பொதுமக்களை பார்த்து கேட்ட நிகழ்வு திருச்சியில் நடைபெற்றுள்ளது.

திருநாவுக்கரசரின் இந்தப் பேச்சை மேடையில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் துளியும் ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

முதலமைச்சரையும், அமைச்சர்களையும் சிரிக்க வைப்பதாக நினைத்துக்கொண்டு திருநாவுக்கரசர் பேசியது அங்கிருந்த பலரையும் முகம் சுளிக்கவும் வைத்திருக்கிறது.

திருச்சி நிகழ்ச்சி

திருச்சி நிகழ்ச்சி

திருச்சி மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க வந்த முதலமைச்சர் ஸ்டாலின், திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் திருச்சி மக்களவை உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரும் கலந்துகொண்டார். முதலமைச்சர் பேசுவதற்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில நிமிடங்கள் பேசுவதற்கு அழைக்கப்பட்டனர்.

திருநாவுக்கரசர் பேச்சு

திருநாவுக்கரசர் பேச்சு

அந்த வகையில் மைக் பிடித்த காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர், திருச்சி எம்.பி. என்கிற முறையில் முதலமைச்சரை வரவேற்பதாகவும் இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, '' கைதட்ட ஏன் இவ்வளவு சிரமப்படுறீங்க, நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன், வந்ததில் இருந்து அடக்கம் ஒடுக்கமாக அப்படியே அமர்ந்திருக்கீங்க என கூட்டத்தை நோக்கி பேசினார் திருநாவுக்கரசர்.

 என்ன தயக்கம்?

என்ன தயக்கம்?

மேலும், கைதட்டுவதில் உங்களுக்கு என்ன தயக்கம் என தனக்கு புரியவில்லை என்றும் உங்களை கைதட்டச் சொல்வது முதலமைச்சரை உற்சாகப்படுத்த தானே தவிர வேறு காரணமல்ல என்று விளக்கம் கூட அளித்தார். திருநாவுக்கரசரின் இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த அமைச்சர் பொன்முடி மட்டுமே சிரித்தார். மற்றபடி முதலமைச்சர் உட்பட மற்ற அமைச்சர்கள் யாரும் இந்தப் பேச்சை ரசிக்கவில்லை.

அரசு நிகழ்ச்சி

அரசு நிகழ்ச்சி

காரணம் நடைபெறுவது அரசு நிகழ்ச்சிதானே தவிர கட்சி நிகழ்ச்சியல்ல. இது கூடத் தெரியாமல் கைதட்டலை கேட்டுப்பெறுகிறாரே திருநாவுக்கரசர் என கூட்டத்தில் இருந்தவர்கள் முணுமுணுத்ததை காண முடிந்தது. இதனிடையே சுதாரித்துக்கொண்ட அவர், அடுத்ததாக நலத்திட்ட உதவிகள் தொடர்பாக தனது பேச்சை திருப்பியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+