நான் பேசும் போது ஏன் யாரும் கைதட்டவில்லை? என்ன தயக்கம் உங்களுக்கு? திருநாவுக்கரசர் வருத்தம்!
திருச்சி: நான் பேசும் போது ஏன் யாரும் கைதட்ட மாட்டேன் என்கிறீர்கள் என்று வருத்தப்பட்ட திருநாவுக்கரசர் எம்.பி. என்ன தயக்கம் உங்களுக்கு என கூட்டத்தில் இருந்த பொதுமக்களை பார்த்து கேட்ட நிகழ்வு திருச்சியில் நடைபெற்றுள்ளது.
திருநாவுக்கரசரின் இந்தப் பேச்சை மேடையில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் துளியும் ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
முதலமைச்சரையும், அமைச்சர்களையும் சிரிக்க வைப்பதாக நினைத்துக்கொண்டு திருநாவுக்கரசர் பேசியது அங்கிருந்த பலரையும் முகம் சுளிக்கவும் வைத்திருக்கிறது.

திருச்சி நிகழ்ச்சி
திருச்சி மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க வந்த முதலமைச்சர் ஸ்டாலின், திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் திருச்சி மக்களவை உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரும் கலந்துகொண்டார். முதலமைச்சர் பேசுவதற்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில நிமிடங்கள் பேசுவதற்கு அழைக்கப்பட்டனர்.

திருநாவுக்கரசர் பேச்சு
அந்த வகையில் மைக் பிடித்த காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர், திருச்சி எம்.பி. என்கிற முறையில் முதலமைச்சரை வரவேற்பதாகவும் இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, '' கைதட்ட ஏன் இவ்வளவு சிரமப்படுறீங்க, நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன், வந்ததில் இருந்து அடக்கம் ஒடுக்கமாக அப்படியே அமர்ந்திருக்கீங்க என கூட்டத்தை நோக்கி பேசினார் திருநாவுக்கரசர்.

என்ன தயக்கம்?
மேலும், கைதட்டுவதில் உங்களுக்கு என்ன தயக்கம் என தனக்கு புரியவில்லை என்றும் உங்களை கைதட்டச் சொல்வது முதலமைச்சரை உற்சாகப்படுத்த தானே தவிர வேறு காரணமல்ல என்று விளக்கம் கூட அளித்தார். திருநாவுக்கரசரின் இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த அமைச்சர் பொன்முடி மட்டுமே சிரித்தார். மற்றபடி முதலமைச்சர் உட்பட மற்ற அமைச்சர்கள் யாரும் இந்தப் பேச்சை ரசிக்கவில்லை.

அரசு நிகழ்ச்சி
காரணம் நடைபெறுவது அரசு நிகழ்ச்சிதானே தவிர கட்சி நிகழ்ச்சியல்ல. இது கூடத் தெரியாமல் கைதட்டலை கேட்டுப்பெறுகிறாரே திருநாவுக்கரசர் என கூட்டத்தில் இருந்தவர்கள் முணுமுணுத்ததை காண முடிந்தது. இதனிடையே சுதாரித்துக்கொண்ட அவர், அடுத்ததாக நலத்திட்ட உதவிகள் தொடர்பாக தனது பேச்சை திருப்பியது குறிப்பிடத்தக்கது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications