திருச்சிக்கு மற்றொரு மணிமகுடம்.. சூப்பராக மாறப்போகிறது திருச்சி விமான நிலையம்!
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 10 ஏரோ பிரிட்ஜ்களுடன் புதிய முனையம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய, 'டெர்மினல்' கட்டடம், வரும், 2022 மார்ச் முதல் செயல்பாட்டிற்கு வரும்' என, இந்திய விமான நிலைய ஆணையம் கூறியது.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.951.28 கோடியில் புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கிவைக்கப்பட்டது.
தற்போது வரை 40 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவு பெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழர் பாரம்பரியம்
திருச்சி விமான நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் தமிழர்களின் கலை பண்பாட்டை விவரிக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் வரையப்பட இருக்கிறது. இந்த விமான நிலையமானது 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 2,900 பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய முனையம் வடிவமைக்கப்பட்டு வருகிது

10 ஏரோ பிரிட்ஜ்கள்
மேலும் 48 பரிசோதனை கவுண்ட்டர்களும், 10 ஏரோ பிரிட்ஜ்களும் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் புதிய முனையத்தில் கட்டுப்பாட்டு அறை, தொழில்நுட்ப அறை, ரேடார் கருவி அமைக்கும் பணி உள்ளிட்டவைகள் நடைபெறுகிறது..

துரிதமாகும் பணி
மேலும் திருச்சி விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் விமான நிலையத்தின் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்த தகவல்களும் பதிவிடப்பட உள்ளன. இந்த புதிய முனைய கட்டுமான பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றால் திருச்சி விமான நிலையமானது மற்றுமொரு மைல் கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை என அதிகாரிகள் கூறினர்

பணிகள் விறுவிறுப்பு
இந்நிலையில், கட்டுமான பணிகள் குறித்து, ஏ.ஏ.ஐ., நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருச்சி விமான நிலையத்தில், டெர்மினல் கட்டடத்தின் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும், 2022 மார்ச் மாதம் முதல், இந்த டெர்மினல், பயணியர் செயல்பாட்டிற்கு வரும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications