ஆசை ஆசையாக கொள்ளு கஞ்சி வாங்கி குடித்த 50 பேருக்கு வாந்தி மயக்கம்
திருச்சி: கோயில் விழாவில் ஆசை ஆசையாக கொள்ளு கஞ்சி வாங்கி குடித்த 50 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்குமே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த திருமங்கலம் கிராமத்தில் செல்லாண்டி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வேண்டுதல் நிறைவேற அப்பகுதி மக்கள் சார்பில் விழா நடைபெறுவது வழக்கம்.
அப்படித்தான் இந்த வருஷமும் கோயிலில் கடந்த 3 நாட்களாக விசேஷம் நடந்து வருகிறது.
இதனால் மதியானம், இரவு ஆகிய 2 நேரங்களில் கொள்ளு கஞ்சி தரப்பட்டு வந்தது. இதுபோக வெயில் காலம் என்பதால், இளநீர், நீர் மோர், பானகம் போன்றவையும் கொடுக்கப்பட்டு வந்தது.

கொள்ளு கஞ்சி
இதனை, கிட்டத்தட்ட ஏராளமானோர் வாங்கி குடித்தனர். அதிலும் கொள்ளு கஞ்சியை 50-க்கும் மேற்பட்டோர் ஆசையாக வாங்கி குடித்துவிட்டு, அவரவர்கள் வீட்டுக்கு திரும்பிவிட்டார்கள். இந்நிலையில், கொள்ளு கஞ்சி குடித்தவர்களுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக மயங்கி விழ ஆரம்பித்துள்ளனர்.

உடனடி சிகிச்சை
உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு கொள்ளு கஞ்சி குடித்த அனைவருக்குமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குணமடைந்தவர்கள் ஒவ்வொருவராக வீடு திரும்பி கொண்டிருக்கிறார்கள்.

டாக்டர் சித்ரா
தகவல் அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சித்ரா விசாரணை மேற்கொண்டார். பின்னர் இதைபற்றி சொல்லும்போது, கோவில் திருவிழாக்களில் அன்னதானம், கஞ்சி, தரும்போது முறையாக வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலரிடம் தெரியப்படுத்தி ஆய்வு செய்த பிறகுதான் வினியோகிக்க வேண்டும்.

அறிவுரை
சுத்தம் செய்யப்படாத பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது, காலாவதியான உணவு பொருட்களை வைத்து சமைக்க கூடாது என்று அறிவுறுத்தினார். இதையடுத்து கோயிலில் கொள்ளு கஞ்சி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications