இதுதாங்க அவர் ஸ்பெஷலே.. மிரள வைக்கும் மஞ்சுளா.. சொன்ன தகவலை கேட்டு ஆடிப் போன போலீஸ்!
முருகன் மனைவி மஞ்சுளாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Recommended Video
திருச்சி: "தண்ணீர் பிடிச்சு வெக்கும் டிரம்-மில்தான் பணத்தை ரொப்பி வைப்பார்... கொள்ளையடிச்ச நகைகளை என்கிட்ட தர மாட்டார்.. எல்லாத்தையும் புதைச்சிதான் வெப்பார்.. இதான் அவர் ஸ்பெஷாலிட்டியே" என்று அதிர வைக்கிறார் கேங் லீடர் முருகன் மனைவி மஞ்சுளா!
நகைக்கடையில் ஓட்டையை போட்டு, ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை அள்ளிக் கொண்டு போனார்கள் கொள்ளையர்கள். 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இதில் மணிகண்டனிடம் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணிகண்டனுடன் பைக்கில் வந்து தப்பியோடிய சுரேஷ் பின்னர் செங்கம் கோர்ட்டில் சரணடைந்தான். முக்கிய குற்றவாளியான முருகனும் பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்தனர்.

பறிமுதல்
இப்போது, இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 25 கிலோ நகைகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுபோக முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி தனிப்படை போலீசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மஞ்சுளா
இந்த நிலையில் திருவாரூரில் தங்கியிருந்த முருகனின் மனைவி மஞ்சுளாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதற்காக மஞ்சுளாவை திருச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல்
இந்த விசாரணையில் மஞ்சுளா நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார். அவைகளை போலீசார் தெரிவித்ததாக ஒரு வார இதழும் அத்தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் மஞ்சுளா சொல்லி உள்ளதாவது: "கொள்ளையடிச்ச நகைகளை அவர் யார்கிட்டயும் கையில் தர மாட்டார். அவைகளை மண்ணுக்கு அடியில் புதைச்சுதான் வெப்பார். இதுதான் அவர் ஸ்டைல். ஆனா, எங்கே புதைக்கிறார், எப்ப புதைக்கிறார், எப்போது எடுக்கிறார்.. இதெல்லாம் என்கிட்ட கூட சொல்ல மாட்டார். அவருக்கு மட்டும்தான் தெரியும்.

ராசியான டிரம்
எப்போ தேவையோ, அப்போ புதைத்த நகைகளை வெளியே தோண்டி எடுத்து பணமா மாத்திடுவார். அந்த பணத்தையும் என்கிட்ட தர மாட்டார். தண்ணி பிடிச்சி வைக்கும் டிரம்மில்தான் நிரப்பி வைத்திருப்பார். அது ஒரு ராசியான டிரம்... அந்த டிரம்மில்தான் பணத்தை கொட்டி வைப்பார்.

கடவுள் பக்தி
எனக்கு சின்ன வயசில் இருந்தே கடவுள் பக்தி அதிகம். இவர் இப்படி திருட்டு தொழிலில் இறங்கவும், நிறைய கோயிலுக்கு போக ஆரம்பிச்சேன். கொள்ளை அடிக்க எந்த ஊருக்கு போனாலும் அங்க இருக்கிற கோயில்களுக்கு போவேன், அவரையும் கூடவே கூப்பிட்டு போவேன்.. கூப்பிட்ட கோயில்களுக்கு என்கூடவே வருவார். மத்தபடி வேற எதுவும் எனக்கு தெரியாது" என்றார். எனினும் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications