Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்தம்பித்தது தமிழ்நாடு.. திணறிய திருச்சி, தஞ்சை.. காவிரிக்காக விவசாயிகள் போராட்டம் + ரயில் மறியல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பல்வேறு மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை பங்கிட்டு அளிப்பதில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.. பல ஆண்டுகளாகவே இந்த இழுபறி நீடித்து வரும்நிலையில், காவிரி விவகாரத்தில் 2 மாநில உறவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Trichy Tanjore Cauvery water

கர்நாடகா: கடந்த 11-ம் தேதி அன்றைய தினமும், டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்துக்கு 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. ஆனாலும், தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய தண்ணீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு கறாராக சொல்லிவிட்டது.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்ததுடன், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கும் இன்றைய தினம் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

தீர்மானம்: அதன்படியே, இன்று காலை 11 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், கர்நாடகாவுக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. காவிரி நதிநீரைப் பெற உச்சநீதிமன்றத்தை நாடுவது என்றும் தமிழக அனைத்து கட்சிக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, காவிரி நீர் வழங்காத கர்நாடக அரசை கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு இடதுசாரிகள் கட்சிகளின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.. இன்று தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் நடந்த போராட்டங்கள் நடைபெற்றது.

Trichy Tanjore Cauvery water

போராட்டங்கள்: திருச்சி மாவட்டம் ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தை ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பை சேர்ந்தவர் நடத்தினார்கள்.. அப்போது அங்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனவே, ஜங்சன் ரயில் நிலையம் முன்பு அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ரயில் நிலையம் வளாகத்தில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேரி கார்டுகளை மீறி ஏறிச் செல்ல முற்பட்ட நிலையில் காவல்துறையினருக்கும் விவசாய சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டங்கள்: இதுபோலவே, திருவாரூர், நாகை, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+