ஸ்தம்பித்தது தமிழ்நாடு.. திணறிய திருச்சி, தஞ்சை.. காவிரிக்காக விவசாயிகள் போராட்டம் + ரயில் மறியல்
திருச்சி: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பல்வேறு மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை பங்கிட்டு அளிப்பதில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.. பல ஆண்டுகளாகவே இந்த இழுபறி நீடித்து வரும்நிலையில், காவிரி விவகாரத்தில் 2 மாநில உறவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா: கடந்த 11-ம் தேதி அன்றைய தினமும், டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்துக்கு 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. ஆனாலும், தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய தண்ணீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு கறாராக சொல்லிவிட்டது.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்ததுடன், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கும் இன்றைய தினம் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
தீர்மானம்: அதன்படியே, இன்று காலை 11 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், கர்நாடகாவுக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. காவிரி நதிநீரைப் பெற உச்சநீதிமன்றத்தை நாடுவது என்றும் தமிழக அனைத்து கட்சிக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, காவிரி நீர் வழங்காத கர்நாடக அரசை கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு இடதுசாரிகள் கட்சிகளின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.. இன்று தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் நடந்த போராட்டங்கள் நடைபெற்றது.

போராட்டங்கள்: திருச்சி மாவட்டம் ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தை ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பை சேர்ந்தவர் நடத்தினார்கள்.. அப்போது அங்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனவே, ஜங்சன் ரயில் நிலையம் முன்பு அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ரயில் நிலையம் வளாகத்தில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேரி கார்டுகளை மீறி ஏறிச் செல்ல முற்பட்ட நிலையில் காவல்துறையினருக்கும் விவசாய சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டங்கள்: இதுபோலவே, திருவாரூர், நாகை, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications