திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்யாத மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு
திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற தன்னாட்சி, தன்னாட்சி அல்லாத கல்லூரிகளிலும், தொலைக்கல்வி மையத்திலும் இளநிலை பட்டப்படிப்பில் 2019-20-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சேர்க்கை பெற்றும், முதுநிலை பட்டப்படிப்பில் 2020-21-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சேர்க்கை பெற்றும் பட்டப்படிப்பை நிறைவு செய்ய இயலாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மிகவும் புகழ் பெற்ற அரசு பல்கலைக்கழகங்களில் ஒன்று. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ், அரியலூர், கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகள் இருக்கின்றன. சென்னையில் சென்னை பல்கலைக்கழகம் போல், கோவையில் பாரதியார் பல்கலைக்கழகம் போல், மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகம் போல் மிகவும் முக்கியமான பல்கலைக்கழகம் ஆகும்.இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் தான் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கிறார்கள். பல ஆண்டுகளாக பட்டப்படிப்பு நிறைவு செய்யாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற தன்னாட்சி, தன்னாட்சி அல்லாத கல்லூரிகளிலும், தொலைக்கல்வி மையத்திலும் இளநிலை பட்டப்படிப்பில் 2019-20-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சேர்க்கை பெற்றும், முதுநிலை பட்டப்படிப்பில் 2020-21-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சேர்க்கை பெற்றும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்திருந்த என் பிளஸ் 2 கால வரையறைக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்ய இயலாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது.
இதில் எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் திட்ட கட்டுரை என நிலுவைத் தாள்கள் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வருகிற ஏப்ரல் பருவத்தில் மட்டும் சிறப்பு தேர்வு எழுதிக் கொள்ள பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கிறது. இத்தேர்வுகள் நடத்துவது பற்றி அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், தொலைக்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு விட்டது.
நிலுவைத் தாள்களை வைத்திருக்கும் மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளையோ அல்லது தொலைக்கல்வி மையத்தையோ அணுகி தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய கடைசி நாள் வருகிற பிப்ரவரி 28-ந் தேதி ஆகும்.
மேலும் விவரங்களுக்கு கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் www.bdu.ac.in என்ற இணையதளத்திலும், தொலைக்கல்வி மைய மாணவர்கள் www.bdu.ac.in/cde என்ற இணையதளத்திலும் சென்று தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications