காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டி.. திருச்சி நாதக மாநாட்டில் வெளியான அறிவிப்பு!
திருச்சி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் நடக்கும் நாதக மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ள சீமான், மேட்டூர் தொகுதியில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் இன்னும் 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இம்முறை தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என்று 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் சட்டசபைத் தேர்தலில் நாதக சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்திருக்கிறார். அதன்படி கும்மிடிப்பூண்டி - வழக்கறிஞர் தர், பொன்னேரி- பொறியாளர் ராஜாத்தி, திருத்தணி - முனைவர் சந்திரன் ஆகியோர் நாதக சார்பில் போட்டியிடுகின்றனர். அதேபோல் ஆர்கே நகர்- வெண்ணிலா தாயுமானவன் போட்டியிடுகிறார்.
பெரம்பூர்- வெற்றித்தமிழன், கொளத்தூர்- வழக்கறிஞர் சவுந்தரபாண்டியன் லூடர் சேத் போட்டியிடுகின்றனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் இயக்குநர் மு.களஞ்சியம், எடப்பாடி தொகுதியில் பிரியதர்ஷினி என்பவரும் நாதக சார்பில் போட்டியிடுகின்றனர். அதேபோல் வீரப்பன் மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பில் மேட்டூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மதுரவாயல் - ரேவதி, அம்பத்தூர் - சிலம்பரசன், மாதவரம் - கிருத்திகா ஏழுமலை, திருவொற்றியூர் - சத்யா பாஸ்கர், அண்ணாநகர் - வழக்கறிஞர் சங்கர், விருகம்பாக்கம் - சந்தோஷ், சைதாப்பேட்டை - வித்யா, தி நகர் - அனுஷா விஜயகுமார், அணைக்கட்டு - ரவிகுமார், கீழ்வைத்தியனாங்குப்பம் - கலையேந்திரி, குடியாத்தம் - இமலன் ஆகியோர் நாதக சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17 சதவீதம் வாக்குகளை காரைக்குடி தொகுதியில் நாதக பெற்றது. அதேபோல் சீமானின் சொந்த ஊரும் சிவகங்கையில் இருப்பதால், இம்முறை சட்டசபை செல்ல வேண்டும் என்பதில் சீமான் தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications