"கல்யாணம் பண்ணிக்கலாம்"ன்னு.. +2 மாணவி கிட்ட சொன்னாராம் அந்த பாஜக நிர்வாகி.. தூக்கிய திருச்சி போலீஸ்
திருச்சி பாஜக நிர்வாகியை போலீசார் போக்சாவில் கைது செய்தனர்
திருச்சி: திருச்சி பாஜக நிர்வாகியை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.. சமீபத்தில்தான், பாஜக நிர்வாகி ஒருவரை போக்சோவில் கைதான நிலையில், மீண்டும் மற்றொரு பாஜக நிர்வாகி போக்சோவில் கைதாகி உள்ளது, பரபரப்பை கூட்டி வருகிறது.
சமீபத்தில், தாய் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னையை சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் மீது போக்சோ சட்டத்தில் கைதாகி இருந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி.. 56 வயதாகிறது.. இவர் பெரம்பூர் மேற்கு மண்டல பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வந்தார்.

பாலியல் டார்ச்சர்
இவர் தன்னுடைய வீட்டின் அருகே வசிக்கும் தாய் - மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு, இந்த வழக்கு கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை தேடி வந்தனர்... அதே நேரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீசாரும், போக்சோ சட்டத்தில் பார்த்தசாரதி மீது இன்னொரு வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்... இதனால் பெரும் பரபரப்பு ஏற்படவும், கட்சியில் இருந்து பார்த்தசாரதி நீக்கப்படுவதாக அறிக்கை ஒன்று வெளியானது..

ஓட்டம் பிடித்தார்
இறுதியில், ஆந்திர மாநிலம் சித்தூரில், பார்த்தசாரதி நண்பர் வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவும், போலீசார் சித்தூருக்கு விரைந்தனர். ஆனால், போலீசார் வருவதை கேள்விப்பட்டதுமே, பார்த்தசாரதி ஓட்டம் பிடித்தார்... இதையடுத்து கிராம மக்களிடம் பாலியல் விவகாரம் தொடர்பாக போலீசார் எடுத்து சொல்லவும், பொது மக்கள் உதவியுடன் பார்த்தசாரதியை போலீசார் மடக்கி பிடித்தனர்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இப்போது இன்னொரு சம்பவம் இதேபோல நடந்து, இதே போல பாஜக நிர்வாகி ஒருவர் போக்சோவில் கைதாகி உள்ளார்.

திருச்சி வினோத்
திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத்.. 26 வயதாகிறது.. இவர் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.. திருமணம் செய்வதாக சொல்லி, அவரை ஏமாற்றிவிட்டதாக தெரிகிறது... பிறகு ஒருகட்டத்தில் அந்த சிறுமியிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டாராம்.. இதனால், கலங்கி போன அந்த சிறுமி, வினோத்திடம் இதை பற்றி கேட்டதற்கு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் வினோத்.. இதையடுத்து சிறுமி சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இன்ஸ்டாகிராம்
இந்த புகாரின் பேரில் திருவரங்கரம் போலீசார் விசாரணை நடத்த பரிந்துரை செய்தனர்... இதையடுத்து திருவரங்கம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து உள்ளனர்.. பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியிருக்கிறார் வினோத்.. அவரை காதலிப்பதாகவும் சொல்லி, கல்யாணம் செய்து கொள்வதாகவும் உறுதி கூறியுள்ளதாக தெரிகிறது. இப்போது, அச்சிறுமியை ஏமாற்றிய நிலையில், சம்பந்தப்பட்ட நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ளது, மீண்டும் அதிர்வலையை கட்சிக்குள் உண்டுபண்ணி வருகிறது.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications