ரூ.559 செலுத்தினால் 10 லட்சம்.. வீட்டுக்கே வரும் தபால்காரர்கள்.. தூத்துக்குடி மக்களுக்கு குட்நியூஸ்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் வீட்டுக்கு வீடு பொது காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை இந்த முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களையும், தங்கள் வாகனங்களையும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்து பயன்பெறலாம். இந்த காப்பீட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.559 செலுத்தினால் ரூ.10 லட்சமும், ரூ.799 செலுத்தினால் ரூ.15 லட்சமும் கிடைக்கும்.
இன்றைக்கு தபால்களை அனுப்புவதை தாண்டி, மக்களுக்கு அஞ்சல் நிலையத்தில் வங்கி சேவையையும் தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இதனால் பலரும் தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கி தங்கள் பணத்தை சிறுக சிறுக சேமித்து வருகிறார்கள். செல்வ மகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்பு திட்டம், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், பிஎம் கிஷான் உள்பட பல்வேறு வகையான தபால் நிலைய கணக்குகளை மக்கள் ஆரம்பித்து பணம் சேமிக்கிறார்கள்.

மொபைல் பேங்கிங்
அதேபோல் தபால் நிலையங்களில் முதியோர்களுக்கு சிறப்பு கணக்கு, குழந்தைகளுக்கு ஆர்டி திட்டம் மற்றும் மாதம் மாதம் பணம் போடும் வகையில் சிறப்பு திட்டங்கள், வங்கிகளை போல் பணம் போட்டு வேண்டிய போது எடுத்துக் கொள்ளும் வகையில் சேமிப்பு திட்டங்கள் என பல்வேறு வசதிகளை தபால் துறை செய்லபடுத்தி வருகிறது. மேலும் வங்கிகளை போல் 'மொபைல் பேங்கிங்' சேவையும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆயுள் காப்பீடு திட்டங்கள்
இந்த திட்டம் காணரமாக உங்களுடைய ஐ.பி.பி.பி. வங்கி கணக்குடன் உங்கள் தபால்நிலைய சேமிப்பு கணக்கை இணைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். மேலும் ஐ.பி.பி.பி. செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், தபால்நிலைய ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையாக வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
யுபிஐ ஸ்டிக்கர் அட்டை
இதேபோல் வியாபார கணக்கு மூலம் வியாபாரிகள் தங்கள் கடைகளில் யு.பி.ஐ. ஸ்டிக்கர் அட்டை மூலம் பணம் பெறும் வசதியும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு திட்டங்களை வீடு தேடியும் தபால்துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் வீட்டுக்கு வீடு பொது காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
ரூ.559 செலுத்தினால் ரூ.10 லட்சம்
இது குறித்து கோவில்பட்டி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் ஜூன் 1-ந்தேதி முதல் "ஹர் கர் சுரக்சா" வீட்டுக்கு வீடு பொது காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த காப்பீட்டுத் திட்டமானது விபத்துக்களால் ஏற்படும் செலவுகள், ஊனம், உயிரிழப்பு போன்றவற்றிற்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 18 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் சேரலாம். இந்த காப்பீட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.559 செலுத்தினால் ரூ.10 லட்சமும், ரூ.799 செலுத்தினால் ரூ.15 லட்சமும் கிடைக்கும். மேலும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு மருத்துவக்காப்பீடு, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் காப்பீடும் வழங்குகிறது.
தபால்காரர்கள் மூலம் சேவை
இத்திட்டங்களில் சேர அனைத்து தபால் நிலையங்களிலும் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் பகுதி தபால்காரர் மூலமும் இத்திட்டத்தில் சேரலாம். பொதுமக்கள் தங்களையும், தங்கள் வாகனங்களையும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்து பயனடையலாம்" இவ்வாறு அந்த சேவை குறித்து அவர் தெரிவித்து உள்ளார். கோவில்பட்டி பகுதியில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எந்த பகுதியில் உள்ளவர்களும் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று காப்பீடு திட்டங்களில் சேர்ந்து பயன்பெறலாம்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications