45 வயது மாரியம்மாளுடன் 28 வயது இளைஞர்.. "விடிகாலையிலேயே"... வெகுண்ட கணவர்.. வெட்டித் தள்ளினார்!
மனைவி உட்பட 2 பேரை கொன்ற கணவன் கைதானார்
Recommended Video
தூத்துக்குடி: 45 வயது மாரியம்மாளுக்கு 28 வயது ராமமூர்த்தியுடன் கள்ள உறவு.. விடிகாலையில் ராமமூர்த்தியுடன் மனைவி மாரியம்மாள் ஒன்றாக இருப்பதை பார்த்து ஆத்திரமும், ஆவேசமும் அடைந்த கணவன், 2 பேரையுமே அரிவாளால் வெட்டி தள்ளிவிட்டார்.. இதில் ராமமூர்த்தி தலை துண்டாக போய் தனியாக விழுந்தது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எட்டயபுரம் அருகே உள்ள கிராமம் புங்கவர்நத்தம்.. இங்கு வசித்து வருபவர் சண்முகம். இவரது மனைவிதான் மாரியம்மாள்... 45 வயதாகிறது!
இவருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் ராமமூர்த்திக்கும் கள்ள காதல் ஏற்பட்டுள்ளது.. ராமமூர்த்திக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
நெருக்கம்
இளைஞருடன் மனைவிக்கு பழக்கம் இருப்பது தெரிந்து சண்முகம் பலமுறை 2 பேரையுமே கண்டித்துள்ளார்... ஆனாலும் இருவருமே கேட்கவில்லை! தொடர்ந்து ஒருவருக்கொருவர் கள்ள உறவை நீட்டித்து வந்துள்ளனர்... இந்நிலையில், நேற்று விடிகாலை தூங்கி கொண்டிருந்த சண்முகம் திடீரென கண்விழித்தார்.. அப்போது பக்கத்தில் இருந்த மாரியம்மாளை காணோம்.
சண்முகம்
இதனால் பக்கத்து ரூமில் தூங்கி கொண்டிருப்பார் என எட்டி பார்த்தார்.. அப்போது மாரியம்மாளும், ராமமூர்த்தியும் ஒன்றாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. சொல்ல சொல்ல கேட்காமல், வீட்டுக்குள்ளேயே வந்து இப்படி நடந்து கொண்டதால் சண்முகத்துக்கு ஆத்திரம் தலைக்கேறியது.. நேராக அரிவாளை எடுத்து ராமமூர்த்தியை வெட்டினார்.
சரண்
இதில் ராமமூர்த்தி தலை துண்டாக கீழேபோய் விழுந்தது.. பக்கத்தில் உறைந்து போய் பார்த்து கொண்டிருந்த மாரியம்மாளுக்கு அடுத்த வெட்டு விழுந்தது.. இதில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் துடிதுடித்து இறந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 2 பேரை வெட்டி சாய்த்த சண்முகம், பசுவந்தனை போலீசில் சரண் அடைந்தார்.
அதிர்ச்சி
விரைந்து வந்த போலீசார் லுங்கியுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராமமூர்த்தி மற்றும் மாரியம்மாளின் சடலங்களையும் மீட்டனர்.. அவைகளை போஸ்ட் மார்ட்டத்துக்கும் அனுப்பி, சண்முகத்தையும் கைது செய்தனர். விடிகாலை நேரத்திலேயே நடந்த இரட்டை கொலை சம்பவம் விளாகத்திகுளத்தில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.