ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. இன்று தூத்துக்குடி இன்ஸ்பெக்டர்களிடம் சிபிஐ விசாரணை
ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போது பணியில் இருந்து போலீசாரிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்த உள்ளது.
சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போது பணியில் இருந்து போலீசாரிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்த உள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

அதன்பின் ஸ்டெர்லைட் இழுத்து மூடப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது, ஸ்டெர்லைட் விரிவாக்கம், துப்பாக்கி சூடு என மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இதில் வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ அனைவரையும் விசாரித்து வருகிறது.
ஏற்கனவே . ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. வன்முறையை தூண்டியதாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போது பணியில் இருந்து போலீசாரிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. அப்போது பணியில் இருந்த மற்ற போலீசாரிடமும் விசாரிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications