வேலூர் காட்டுக்குள் மர்மம்! பேர்ணாம்பேட்டு குட்டைக்குள் பார்த்தால் "3 எச்சங்கள்" ஆடிப்போன ஆபீசர்ஸ்
வேலூர்: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு காட்டுப் பகுதியில் தனியார் தோட்டத்தில் உள்ள குட்டையில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. இது வனத்துறை ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் உண்டு பண்ணி வருகிறது.. மாவட்ட வனத்துறையினர் உடனடியாக விரைந்து சென்று விசாரணயை முடுக்கி விட்டுள்ளனர்..
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் மலை சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவை கொண்டது... இங்குள்ள சாத்கர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 900 ஹெக்டர் பரப்பளவு கொண்ட மலை உள்ளது.

வேலூர் காட்டில் மர்மம்
இந்த மலையின் ஒரு பகுதியில் குட்டையும் உள்ளது.. இந்த குட்டையில் 3 யானைகள் இறந்து கிடப்பது அங்குள்ளவர்களுக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர்..
இதுகுறித்து உடனடியாக வேலூர் மண்டல வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.. விரைந்து வந்த அவர்கள், இறந்து கிடந்த 3 யானைகளையும் பார்வையிட்டனர்.. அப்போதுதான் அதில் ஆண் குட்டி, பெண் யானை இறந்ததும் தெரியவந்தது.. இந்த 3 யானைகளுமே அழுகிய நிலையில் கிடந்தன.. அத்துடன் யானைகள் இறந்து பல நாட்கள் ஆகிவிட்டிருந்ததால், யானைகளின் உடல்கள் எலும்புக்கூடாக மாறி விட்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
எலும்பு கூடுகள் - போஸ்ட் மார்ட்டம்
ஆனால், இந்த யானைகள் எப்படி இறந்தன என்று தெரியவில்லை.. எனவே இதுகுறித்த விசாரணையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்... இப்போதைக்கு யானைகளின் எலும்பு கூடுகள் மீட்கப்பட்ட போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..
இன்றுதான் அதாவது வெள்ளிக்கிழமையன்று யானைகளின் உடல்கள் போஸ்ட் மார்ட்டம் செய்யப்படும் என்று சொல்லி உள்ளனர். அந்த ரிப்போர்ட் வந்தால்தான், யானைகள் எப்படி இறந்தன என்பது தெரியவரும் என்கிறார்கள் அதிகாரிகள்..
அடுத்தடுத்த யானைகள்
இதே பேரணாம்பட்டு காட்டுக்குள் சமீபத்தில்தான் 2 யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.. கடந்த நவம்பர் 30ம் தேதி பேர்ணாம்பட்டை அடுத்துள்ள சிந்தகணவாய் காட்டுப்பகுதியில் 6 வயது மதிக்கத்தக்க யானையும், அக்டோபர் மாதம் பேர்ணாம்பட்டு அடுத்துள்ள பாஸ்மார்பெண்டா வனப்பகுதியில் சுமார் 7 வயது மதிக்கத்தக்க யானையும் இறந்து கிடந்தன.
அந்த யானைகளின் உடம்பில் ரத்த காயங்கள் தென்பட்டன.... இப்போது மேலும் 3 யானைகள் இறந்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
இதுகுறித்த கவலையை வெளிப்படுத்தி உள்ள வன ஆர்வலர்கள், இங்கு யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.
மின்வேலி? விஷ நீர்?
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "யானைகளின் மர்ம உயிரிழப்புக்கு காரணம் தெரியவில்லை.. உடல்கள் அழுகி கிடக்கின்றன.. இதனால் எப்போது அந்த யானைகள் இறந்தன என்பதை துல்லியமாக அறிய முடியாது.. அதேபோல காரணமும் உடனடியாக தெரியாது.
கால்நடை மருத்துவ குழுவினரின் பரிசோதனை நடந்து வருகிறது.. குட்டையில் நீர் குடிக்க சென்றபோதுதான் யானைகள் இறந்துள்ளன..
ஒருவேளை விஷநீரை குடித்திருக்குமா? அல்லது மின்வேலி, இயற்கை காரணங்கள் ஏதாவது இருக்குமா? யாராவது யானைக்கு தீங்கு நினைத்து இப்படியான செயல்களை செய்தார்களா? என்பது தெரியவில்லை. விசாரணை நடக்கிறது. அதேபோல வனத்துறை சிறப்பு கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு, ரோந்து பணிகள் தீவிரமாகி உள்ளன..












Click it and Unblock the Notifications