Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூருக்குள் தோன்றிய "உருவம்".. AI கேமராவில் பார்த்தீங்களா? குடியாத்தம் வனப்பகுதியில் ஒரே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் அஞ்சலி மரணத்துக்கு பிறகு, ஒட்டுமொத்த மக்களும் நிலைகுலைந்து காணப்படுகிறார்கள்.. குடியாத்தத்தை சுற்றியுள்ள வனப்பகுதி மக்களும், சிறுத்தை நடமாட்டம் காரணமா, மிகப்பெரிய அச்சத்துக்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் ஊராட்சி துருவம் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம்.. 70 வயதான இவர் ஒரு விவசாயி... மனைவி பெயர் வளர்மதி. இந்த தம்பதிக்கு 5 மகள்கள் இருக்கிறார்கள்.

vellore ai camera gudiyatham

இதில் 4 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.. 22 வயதான கடைசி மகள் அஞ்சலி, இளங்கலை வணிகவியல் பட்டதாரி ஆவார்.. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, வீட்டின் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு அஞ்சலி சென்றிருக்கிறார்.. அப்போது, அங்கு வந்த சிறுத்தை, அஞ்சலியை கடித்து குதறி கொன்றுவிட்டது.

போராட்டம்: சிறுத்தையின் பிடியில் அஞ்சலி இருப்பதை கண்டு, அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர்.. ஆனால், அதற்குள் அந்த சிறுத்தை தப்பி ஓடிவிட்டது... பின்னர் தகவலறிந்த சப்-கலெக்டர் சுபலட்சுமி தலைமையில் வருவாய்துறையினர், கே.வி.குப்பம் போலீசார், அஞ்சலியின் சடலத்தை மீட்க முயன்றனர்.

ஆனால் சடலத்தை எடுக்கவிடாமல் அந்த பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு, அஞ்சலியின் சடலத்தை மீட்ட போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பான வழக்கையும் பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

போஸ்ட் மார்ட்டம்: எனினும், சிறுத்தை தாக்கியதில் அஞ்சலி என்ற பட்டதாரி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.. ஏற்கனவே, குடியாத்தம் அருகே வீரிசெட்டிபள்ளி, அனுப்பு, காந்தி கணவாய் உள்ளிட்ட கிராமங்களில் சிறுத்தை தாக்கியதில், ஆடுகள், கோழிகள், கன்று குட்டி போன்றவை இறந்து வருகின்றன.

சில நாட்களுக்குமுன்புகூட காந்தி கணவாய் பகுதியில் சிறுத்தை தாக்கி பசுமாடு ஒன்று இறந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், பரதராமி, அனுப்பு, காந்தி கணவாய், மோடிகுப்பம் , மோர்தானா , ரங்கசமுத்திரம் , பேரணாம்பட்டு உள்ளிட்ட வன பகுதிகளிலும் சிறுத்தை நடமாட்டம் தகவல் பரவியதால் அந்த பகுதியிலுள்ளவர்கள் எல்லாம் கலக்கம் அடைந்தனர்.

ஆடு, பசுமாடு: இந்நிலையில், அச்சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. குறிப்பாக, காந்தி கணவாய் பகுதியில் சிறுத்தையை கண்காணிக்க AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.. இந்த கேமராக்கள், 24 மணி நேரமும் வனப்பகுதியில் வரும் உயிரினங்களை பதிவு செய்து உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வாட்ஸ் அப்பில் பதிவுகளை அனுப்பிவிடும்.

இந்த அதிநவீன கேமராவை, அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். நேற்றுகூட, வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி, ஆர்டிஓ சுபலட்சுமி ஆகியோர், குடியாத்தம் அடுத்த காந்தி கணவாய் கிராம வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கேமராவில் உருவம்: ஆனால், இதுவரை அந்த சிறுத்தையின் உருவம் கேமராவில் பதியவில்லை.. அதனால், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று குடியாத்தம் வன ரேஞ்சர் வினோபாவுக்கு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார்.

அப்போது, சிறுத்தை மெதுவாக பதுங்கி நடந்து வருவது கேமராவில் பதிவாகியிருந்தது. எனவே, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று குடியாத்தம் வன ரேஞ்சர் வினோபாவுக்கு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார்.. ஏஐ தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட கேமராவில் அசையும் எந்த பொருளையும் உடனடியாக உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், விரைவில் சிறுத்தை சிக்கும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+