வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு.. அன்புமணியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வீர்களா? ராமதாஸ் ஓபன் டாக்!
விழுப்புரம்: வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து ஜூலை 20ம் தேதி அன்புமணி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. பாமக தலைவரக அன்புமணியின் பதவிக்காலம் மே 29ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது என்று தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தனது பேச்சை கேட்காதவர்கள் பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் அதிர்ச்சி கொடுத்தார்.

ராமதாஸ் கொடுத்த அதிர்ச்சி
அதுமட்டுமல்லாமல் நாளுக்கு நாள் அன்புமணிக்கு புதிய புதிய சிக்கல்களை ராமதாஸ் உருவாக்கி வருவதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பேரன் முகுந்தனுக்கு பாமகவில் பதவி கொடுத்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது சகோதரி காந்திமதியை நேரடியாக கட்சிக்குள் கொண்டு வந்துள்ளார் ராமதாஸ். இதனால் பாமக நிர்வாகிகளே அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
அன்புமணி ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து ஜூலை 20ம் தேதி அன்புமணி தலைமையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவினர் அனைவரும் பங்கேற்க அன்புமணி அறிவுறுத்தி வருகிறார். விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடப்பதால், ராமதாஸ் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.
ராமதாஸ் பதில்
இதுகுறித்து ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அன்புமணி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேபோல் ஆர்ப்பாட்டம் என்று நடக்கிறது என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டார். அன்புமணி தொடர்ச்சியாக திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், நடைபயணம் என்று நடத்த ஆயத்தமாகி வருகிறார்.
பாமக ஆயத்தம்
ஆனால் ராமதாஸ் தரப்பில் இதுவரை எந்த கட்சியையும் விமர்சிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினை தம்பி என்று கூறிய ராமதாஸ், கருணாநிதி மறையும் வரை ஸ்டாலின் எப்படி அமைதியாக இருந்தாரோ, அதேபோல் அன்புமணியும் இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்திருந்தார். அதேபோல் பாமகவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு திமுகவே காரணம் என்று அன்புமணி கூறி இருந்தார்.
2 பிரிவாக பாமக
அதனை மொத்தமாக ராமதாஸ் மறுத்திருந்தார். இதனால் வரும் தேர்தலில் திமுக கூட்டணியுடன் செல்ல ராமதாஸ் ஆயத்தமாகி வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமக இரண்டாக உடையும் பட்சத்தில் அன்புமணி ஒரு பிரிவாகவும், ராமதாஸ் ஒரு பிரிவாகவும் செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
ஒரு கை பார்த்துற வேண்டிதான்.. பலத்தை காட்ட தயாராகும் சீனியர்கள்! சசிகலாவுடன் கைகோர்க்கும் ராமதாஸ்? -
அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அதிமுக கூட்டணியில் எவ்வளவு சீட்? அமித்ஷாவை சந்தித்த டிடிவி தினகரன்.. அடுத்து அன்புமணியுடன் மீட்டிங் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications