முஸ்லிம்கள் பற்றி தவறான பேச்சு.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு விருதுநகர் போலீஸ் சம்மன்!
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருக்கு விருதுநகர் போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது
விருதுநகர்: இஸ்லாமியர்கள் பற்றி தவறாக பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு விருதுநகர் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
40 வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசனம் நடந்து முடிந்த நிலையில், அத்திவரதரை மீண்டும் தண்ணீரில் வைக்கக் கூடாது என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கருத்து கூறியிருந்தார். இது சம்பந்தமாக ஜீயர் கடந்த மாதம் 27-ம் தேதி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னதாவது:

"கடந்த காலங்களில் திருடர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு பயந்து அத்திவரதர் சிலையை பூமிக்கடியில் புதைத்தனர். 45 ஆண்டுகள் கழித்து வந்த அத்திவரதரை இப்போது புதைக்க தேவையில்லை. இது தொடர்பாக முதல்வரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கைவிட போகிறோம்.
அதற்கான முயற்சியை தற்போது எடுத்து வருகிறேன். ஏனென்றால், அத்திரவரதர் மேலே வந்தால்தான் மழை பெய்யும். அதனால் அதை மீண்டும் புதைக்க கூடாது" என்று தெரிவித்திருந்தார். ஜீயரின் இந்த கருத்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, மத உணர்வை பாதிக்கும் விதமாக ஜீயர் பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட செயலாளர் சையது அலி என்பவர் முதல்வரின் தனிப் பிரிவிற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசாருக்கு விருதுநகர் மாவட்ட எஸ்பி ராஜராஜன் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் சடகோப ராமானுஜர் வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வரும்படி விருதுநகர் போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications