ராமர் பாலத்தை நிரூபிக்க முடியவில்லை.. சேதுசமுத்திர திட்டத்தை தடுத்தவர் ஜெயலலிதா.. கி.வீரமணி பேச்சு!
ராமர் பாலத்தை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்: ராமர் பாலத்தை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக சேதுசமுத்திர திட்டத்தை ஜெயலலிதா, சுப்பிரமணியன் சாமி மற்றும் சோ ராமசாமி ஆகியோர் தடுத்து நிறுத்தியதாகவும் விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பேருந்து நிலையம் எதிரே திராவிடர் கழகம் சார்பில் ஈரோடு முதல் கடலூர் வரை சமூகநீதி திராவிட மாடல் விளக்க தொடர் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி மற்றும் சிபிஎம், சிபிஐ, மதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கி.வீரமணி பேச்சு
இந்தப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி பேசுகையில், அடிக்க அடிக்க பந்துபோல எழும்புவது தான் இந்த இயக்க,ம். எதிர்நீச்சல் அடித்தே வளர்ந்த இயக்கம் தான் இந்த திராவிட இயக்கம். எந்த கொம்பன் வந்தாலும் இந்த அணியை அசைக்க முடியாது. எல்லா பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதி. சமூக நீதிக்கு எதிரான புத்தகம் மனு தர்மம். இங்கு எல்லோரையும் கடவுள்களை பயமுறுத்தி நம்ப வைத்துள்ளார்களே தவிர அறிவுப்பூர்வமாக நம்ப வைக்கவில்லை.

ஜாதி சாவதில்லை
சரஸ்வதி பூஜை மட்டும் கொண்டாடும் போது, நாம் அனைவரும் 100 சதவிகிதம் படிக்கவில்லை, நீதிக்கட்சி வரும் முன்னர் 100க்கு 8 பேர் மட்டுமே படித்த நிலையில், தற்போது 80 பேர் படித்துள்ளனர். அதற்கு காரணம் பெரியார் தான். பிரதமர் நரேந்திர மோடி கூறுவது போல், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்றால் ஒரே ஜாதி ஏன் இல்லை? இறந்தால் தொல்லை இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் மனிதன், இறந்த பின்னரும் தொல்லை தொடர்கிறது. இறந்த பிணத்திற்கு முன்பாகவும் ஜாதி நிற்கிறது. மனிதன் தான் சாகிறானே தவிர, ஜாதி சாவதில்லை.

பெண்கள் பாதுகாப்பு
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் பல பதவிகளில் பெண்கள் உள்ளனர். மற்ற வடமாநிலங்களில் இந்த நிலை இல்லை. அங்கெல்லாம் பெண்களுக்கு இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் விடுவதில்லை. தமிழ்நாட்டில் 50 சதவிகிதம் பெண்கள் நகர சபை தலைவராக இருப்பதற்கு பெயர் தான் திராவிட மாடல். இந்தியாவில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நீதிமன்றத்திலேயே கூறுகிறார். அதுதான் திராவிட மாடல்.

சேதுசமுத்திர திட்டம்
மத்திய அரசால் இன்று வேலைவாய்ப்பை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டாலும், 100 ஆண்டுகளுக்கு முன்பே வேலைவாய்ப்புக்காக தொடங்கப்பட்டது தான் சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் வெற்றிபெற்றால் திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பெயர் சென்றுவிடும் என்று ஜெயலலிதா, சுப்பிரமணியன் சாமி மற்றும் சோ ராமசாமி ஆகியோர் தனித்தனியாக வழக்கு போட்டு அதை தடுத்துவிட்டனர்.

ராமர் பாலம்
இதற்கு ராமர் பாலம் என்ற நம்பிக்கையை முன் வைத்தனர். ஆனால் இன்று வரை அறிவியல்பூர்வமாக அவர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. எனவே தான் மீண்டும் சேதுசமுத்திர திட்டத்தை தொடங்கி தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் இயற்றினார் என்று தெரிவித்தார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications