Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று தீர்ப்பு.. யார் இந்த பேராசிரியை நிர்மலா தேவி? தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக பேராசிரியர் நிர்மலா தேவி மீது தொடரப்பட் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்த நிர்மலா தேவி என்பவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர்.

Who is this Professor Nirmala Devi Background of the case that rocked Tamil Nadu

இந்த வழக்கு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மாணவிகளிடம், போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன. சுமார் ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

யார் இந்த நிர்மலா தேவி: அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் செல்வாக்குடன் இருந்ததாக கூறப்படுகிறது. பேராசிரியை நிர்மலா தேவி,, தான் வேலை செய்த தனியார் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி, அவர்களை உயர்கல்வித்துறையின் செல்வாக்கானவர்களுக்கு பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றுள்ளார்..

பேராசிரியை நிர்மலா தேவியின் இலக்கில் இருந்த சில மாணவிகள், நிர்மலாதேவி பேசியதை ரெகார்ட் செய்து பெற்றோர்கள் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்தனர். அதை அப்போது கல்லூர் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று புகார் எழுந்த நிலையில், ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகள் எழுந்தது..

ஆரம்பத்தில் மறைக்கப்பட்ட இந்த பிரச்சனையை கையில் எடுத்து பல்வேறு அமைப்புகளின் போராட்டம் நடத்தியதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகே போலீஸ் விசாரணை நடந்தது.. 2018 ஏப்ரலில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஆளுநர் மாளிகையும் இந்த வழக்கில் இணைத்துப் பேசப்பட்டதால், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் தனியாக ஒரு விசாரணைக்குழுவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.

இதனால் தமிழக அரசியலில் பெரும் விவாதமாக மாறிய நிர்மலா தேவி வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுஅன்றைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் நிர்மலா தேவியுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபசார தடுப்புச் சட்டம், தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்திய பிரிவுகளில் விசாரணை நடத்தி நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் குற்றவாளிகள் என இறுதிசெய்து குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. நீண்ட நாள்கள் சிறையில் இருந்த நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் தற்போது ஜாமினில் வெளியில் உள்ளனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், அனைத்துச் சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+