சர்வதேச தூதரகத்தில் கொலை.. முதல் வாரத்திலேயே ரகசிய ஆவணத்தை வெளியிடும் பைடன் அரசு.. பதற்றத்தில் சவுதி
வாஷிங்டன்: செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பான அமெரிக்காவின் ரகசிய அறிக்கை பொதுவெளியில் விடப்படும் என்று அந்நாட்டின் உளவுத் துறை இயக்குநராகப் பதவியேற்கவுள்ள அவ்ரில் ஹைன்ஸ் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். அவருடன் அந்நாட்டின் முதல் பெண் அதிபராகக் கமலா ஹாரிஸ் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் பங்கேற்கவில்லை.
பைடன் பதவியேற்றதைத் தொடர்ந்து, வரும் நாட்களில், முக்கிய பதவிகளில் அவர் பரிந்துரைத்த நபர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அமெரிக்காவின் முதல் பெண் உளவுத் துறை இயக்குநராக அவ்ரில் ஹைன்ஸ் விரைவில் பதவியேற்கவுள்ளார்.

முக்கிய ஆவணம்
இந்நிலையில், வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பான அமெரிக்காவின் ரகசிய அறிக்கை பொதுவெளியில் விடப்படும் என்று அவர் கூறியுள்ளார். உளவுத் துறை இயக்குநராக அவ்ரில் ஹைன்ஸ் பதவியேற்று சில நாட்களில் இந்த முக்கிய ஆவணம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆவணம் வெளியாகும்பட்சத்தில் அது சவுதிக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே பெரும் பிளவைக் கூட உருவாக்கலாம்.

யார் இந்த ஜமால் கஷோகி
ஜமால் கஷோகி முதலில் சவுதி அரசு குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தவர். பின்னர், அவர் திடீரென்று சவுதி அரசு குடும்பம் குறித்தும் அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும் விமர்சிக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் வசித்து வந்த இவர், வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தில் செய்தியாளராகவும் பணிபுரிந்தார். இந்நிலையில், ஜமால் கஷோகி கடந்த 2018ஆம் ஆண்டு துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்டார்.

சவுதி அரசு மறுப்பு
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தூண்டுதலின் பெயரிலேயே இந்த கொலை நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் இதை முற்றிலுமாக மறுத்துள்ள சவுதி அரசு, இந்தக் கொலைக்கும் முகமது பின் சல்மானுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறியது. மேலும், இந்தக் கொலை தொடர்பாகத் தூதரகத்தில் பணிபுந்தவர்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

டிரம்ப் அரசு
சர்வதேச தூதரகத்தில் வைத்து முக்கிய செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக அமெரிக்க ரகசிய அறிக்கை தயார் செய்து இருந்தது. இந்த அறிக்கையைப் பொதுவெளிக்கு வெளியிட வேண்டும் என்று டிரம்ப் அரசுக்கு அந்நாட்டு எம்பிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், டிரம்ப் அரசு இந்த கோரிக்கையை மறுத்துவிட்டனர்.

பெரும் தலைவலி
இந்தச் சூழ்நிலையில்தான் தற்போது உளவுத் துறை இயக்குநராகும் அவ்ரில் ஹைன்ஸ் இந்தக் கொலை தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணம் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். இது வெளியாகும்பட்சத்தில் சவுதிக்கு இது பெரும் தலைவலியை ஏற்படுத்தும். ஏற்கனவே மோசமான பொருளாதாரம் மற்றும் அரசு குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் ஆகியவற்றால் இளவரசர் முகமது பின் சல்மானின் பெயர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரகசிய ஆவணமும் வெளியானால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications