உலக நாடுகளுக்கு 5.5 கோடி தடுப்பு மருந்துகளை அறிவித்த அமெரிக்கா.. ஆனால் இந்தியாவுக்கு போதாதே!
வாஷிங்டன்: 5.5 கோடி கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகள் கிடைக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
தங்கள் பயன்பாட்டுக்கு போக மீதம் உள்ள 80 மில்லியன் (8 கோடி) கொரோனா தடுப்பு மருந்துகளை மற்ற நாடுகளுக்கு வழங்குவதாக அறிவித்தது அமெரிக்கா.

அந்த வகையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு முதற்கட்டமாக 25 (2.5 கோடி) மில்லியன் கொரோனா தடுப்பு டோஸ்களை உலக நாடுகளுக்கு பகிர்ந்து வழங்குவதாக அந்நாடு அறிவித்தது. இதில் இந்தியாவுக்கு 20 முதல் 30 லட்சம் வரை மருந்துகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் 8 கோடியில் இரண்டாவது கட்டமாக 5.5 கோடி டோஸ் தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு வழங்குவதாக திங்கள்கிழமை அன்று அதிபர் ஜோ பிடன் அறிவித்தார். இந்த 5.5 கோடியில் 1.6 கோடி தடுப்பு மருந்துகள் 18 ஆசிய நாடுகளுக்கு கிடைக்கும். அவற்றுள் இந்தியாவும் ஒன்று. இந்த இரண்டாவது செட்டில் இந்தியாவுக்கு 10 முதல் 20 லட்சம் மருந்துகளுக்கு மேல் கிடைக்காது என்றே தெரிகிறது.
அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் மருந்தில் இந்தியாவுக்கு மொத்தமாக 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. ஆனால் இது இந்தியாவின் அன்றாட மருந்து தேவையை பூர்த்தி செய்யாது. ஜோ பிடன் தடுப்பு மருந்துகள் விநியோகம் குறித்து அறிவித்த நேற்றைய தினம் மட்டும் இந்தியாவில் புதிய தடுப்பு மருந்து கொள்கையின கீழ் 82 லட்சம் டோஸ்கள் ஊசி போடப்பட்டன.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications