பெரிய அண்ணனுக்கு பயந்து ஒளிச்சு வச்சா தெரியாம போயிருமா... ஐ.நா., வால் சிக்கிய வடகொரியா
வாஷிங்டன்: அமெரிக்காவின் தாக்குலுக்கு பயந்து வட கொரியா தனது ஏவுகணைகளை விமான நிலையங்களில் ஒளித்து வைத்திருப்பதாக ஐ.நா. நிபுணர் குழு குற்றம்சாட்டியுள்ளது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வியாட்நாமில் சந்தித்து பேச உள்ளார். இந்த நேரத்தில் வடகொரியாவுக்கு சிக்கல் தரும் வகையில் ஐ.நா. நிபுணர்
குழுவின் அறிக்கை வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் சமர்பிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில், வட கொரியாவின் அணு ஆயுத ஏவுகணைத் திட்டத்தைத் தடுப்பதற்காக அந்நாட்டுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளால் எந்த பலனும் இல்லை.

தடையை மீறி நிலக்கரி விற்பனை
பொருளாதாரத் தடைகளை மீறி சட்டவிரோதமாக வடகொரியாவுக்கு பெட்ரோலியப் பொருள்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுமட்டுமில்லாமல், தடையை மீறி வட கொரியா தனது நிலக்கரியை, பிற நாடுகளுக்கு விற்று வருமானம் பார்த்து வருகிறது.

விமான நிலைய ரகசியம்
இதனால், அந்த நாட்டில் அணு ஆயுதங்கள் தயாரிப்புத் திட்டம் தங்கு தடையில்லாமல் நடந்து வருகிறது. ஏவுகணைகளை ரகசியமாகத் தயாரிக்கவும், சோதிக்கவும் விமான நிலையம் போன்ற பொது இடங்களை வட கொரியா பயன்படுத்துகிறது.

அமெரிக்காவுக்கு பயந்த வடகொரியா
ஏவுகணைத் தயாரிப்பதை தடுப்பதுக்காக அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதை தடுக்கும் வகையில், தனது ஏவுகணைகளை விமான நிலையங்களில் வட கொரியா பதுக்கி வைத்துள்ளது. சட்டவிரோதமாக எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும், நிலக்கரி ஏற்றுமதி செய்வதற்கும் வடகொரியா தனது விமான நிலையங்களை பயன்படுத்துகிறது என ஐ.நா. நிபுணர் குழுவினர்
குற்றம்சாட்டியுள்ளனர்.

உளவுத்துறை சொன்னது உண்மை
ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறை வட கொரியா தனது ஏவுகணைத் திட்டத்தைக் கைவிடவில்லை என கூறியிருந்த நிலையில் இப்போது ஐ.நா. நிபுணர் குழுவும் அதே கருத்தைத் சொல்லியிருப்பதால் வடகொரியாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications