அமெரிக்க நாடளுமன்ற வன்முறை... வன்முறையாளர்களை பொறி வைத்து பிடிக்கும் எப்.பி.ஐ!
வாஷிங்டன்: அமெரிக்க நாடளுமன்ற வன்முறையில் ஈடுபட்டவர்களை அவர்கள் பதிவான வீடியோவை வைத்து எப்.பி.ஐ. கைது செய்து வருகிறது.
அமெரிக்க நாடளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறையில் 5 பேர் பரிதமாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அபார வெற்றி பெற்றார். ஆனால் டொனால்ட் டிரம்ப் ,இந்த வெற்றியை ஏற்கவில்லை. தேர்தலில் மோசடிகள் நடந்ததாக குற்றம்சாட்டி அவரும், அவரது ஆதரவாளர்களும் போட்ட வழக்குகள் கோர்ட்டுகளில் செல்லுபடியாகவில்லை.
ஜோ பிடன் தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது. அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் இறந்தனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் நடந்த வன்முறை உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஏராளமானோர் தொடர்ந்து கைது செய்யபப்ட்டு வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை, வீடியோ காட்சிகளை வைத்து எப்.பி.ஐ. பொறி வைத்து பிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வீடியோ காட்சிகளை வைத்து 2 வன்முறையாளர்களை எப்.பி.ஐ. கைது செய்துளளது.
வன்முறையின்போது கொம்புகள், ஒரு ஃபர் பெல்ட், ஃபேஸ் பெயிண்ட் மற்றும் அமெரிக்கக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட ஒரு ஈட்டியை முத்திரை குத்துவது போன்றவற்றில் முக்கியமாக இடம்பெற்ற ஜேக்கப் அந்தோனி சான்ஸ்லி என்பவர் கைது செய்யப்பட்டார். இதே போல் ஆடல் கிறிஸ்டியன் ஜான்சனையும் கைது செய்தனர்.
புளோரிடாவின் பாரிஷைச் சேர்ந்த ஜான்சன், கேபிட்டலின் அரங்குகளில் நடந்து செல்லும்போது தன்னைப் பற்றிய நேரடி வீடியோவை பேஸ்புக்கில் லைவ் செய்தார் என கூறப்படுகிறது. இந்த கலவரங்களில் பங்கேற்றவர்களில் இணையத்தில் வெளியான படங்களை அடையாளம் காண உதவுமாறு எஃப்.பி.ஐ பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications