ஓஹியோ மாகாணத்திலேயே வெற்றி பெற்றாச்சு.. அப்போ டொனால்ட் ட்ரம்ப்தான் அதிபர்.. ஆதரவாளர்கள் குஷி
வாஷிங்டன்: எப்போதுமே அமெரிக்க அதிபரை தேர்வு செய்யும் மாகாணம் என்று வர்ணிக்கப்படும் ஓஹியோ மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் கைப்பற்றியுள்ளார்.
எப்போதுமே, அமெரிக்காவில் சில மாகாணங்கள் ஜனநாயகக் கட்சிக்கும், சில மாகாணங்கள் குடியரசு கட்சிகளுக்கும் தொடர்ந்து பல தேர்தல்களில் வாக்களித்து வருகின்றன. சில மாகாணங்கள் மட்டும்தான் ஸ்விங் ஸ்டேட், அல்லது பேட்டில் ஃபீல்டு என்று, அழைக்கப்படுகிறது.
அந்த மாகாண மக்கள் எந்த மாதிரி முடிவை எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதை பொறுத்துதான் அடுத்த அதிபர் யார் என்பது ஒவ்வொரு தேர்தலிலும் முடிவாகிறது.

ஓஹியோ சென்டிமென்ட்
ஓஹியோ மாகாணத்தை பொருத்த அளவில் அங்கு எந்த கட்சி பிரதிநிதிகளை பெறுகிறதோ, அந்த கட்சியைச் சேர்ந்தவர்தான் அதிபராக பதவியேற்பது இத்தனை வருடங்களாக வழக்கமாக இருந்து வருகிறது. இது ஒரு செண்டிமெண்ட் என்றும் பார்க்கப்படுகிறது. ஓஹியோ மாகாணத்தில் உள்ள 18 வாக்குகளை, டொனால்ட் ட்ரம்ப் பெற்றுள்ளார்.

டிரம்ப் பேச்சு
இந்த நிலையில்தான், இன்று வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப், பென்சில்வேனியா, டெக்ஸாஸ், ஜார்ஜியா மாகாணங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். நமது வெற்றியை இது பகிரங்கமாக காட்டுகிறது.

தேர்தல் முறைகேடு
ஆனால் சில மாகாணங்களில் தேர்தல் முறைகேடுகள் நடப்பதால் ரிசல்ட் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. முறைகேடுகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று வாக்கு எண்ணிக்கைக்கு தடை பெற தயங்கமாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓஹியோ முக்கியம்
ஓஹியோ எப்போதுமே, அமெரிக்க மக்களின் மனநிலையை பிரதிபலிக்கக் கூடியது என்பதும், டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஒரு சாதகமான அம்சமாக மாறி விட்டது. ஜோ பிடன் முன்னிலை பெற்றாலும், ஓஹியோ உள்ளிட்ட மாகாண வெற்றிகளை சுட்டிக்காட்டி, அமெரிக்க மக்களின் மனநிலைக்கு மாறாக ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது என்றும், எனவே, தேர்தலில், முறைகேடு நடந்துள்ளது என்றுதானே அர்த்தம் என்ற வாதத்தை முன் வைக்க ஆரம்பித்து விட்டார்.












Click it and Unblock the Notifications