இந்தியாவுக்கு மேலும் ஷாக் கொடுத்த டிரம்ப்! 125% வரி விதிப்பு.. நீதிமன்றம் அவ்வளவு சொல்லியும் கேட்கல!
வாஷிங்டன்: பரஸ்பர வரி என்கிற பெயரில் டிரம்ப் போட்டிருந்த வரியை சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இருப்பினும் 15% வரியை டிரம்ப் விதித்திருக்கிறார். இது தவிர, இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்களுக்கு டிரம்ப் 125% வரியை விதித்திருக்கிறார். இது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா, இந்தோனேசியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்கள் மீது 125% வரியை அமெரிக்க வர்த்தகத் துறை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையால் இந்தியாவுக்குப் பெரிய வரிச் சுமை ஏற்பட்டுள்ளது.

இந்திய பொருட்களுக்கு வரி
அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளத்தில் வெளியான அறிவிப்பில், இந்தியாவுக்கு 125.87% வரி விதிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல், இந்தோனேசியாவுக்கு 104.38%, லாவோஸுக்கு 80.67% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வுக்கு, 'அமெரிக்கா பர்ஸ்ட்' என்ற கொள்கையே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அரசு வர்த்தகப் புள்ளிவிவரங்களின்படி, இந்த 3 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் $4.5 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள், 2025 ஆம் ஆண்டுக்கான மொத்த அமெரிக்க இறக்குமதியில் 3ல் 2 பங்காக இருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பொருட்கள்
இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்ட சோலார் பேனல்களுக்கு முன்னதாக அமெரிக்க மானியம் கொடுத்து வந்தது. ஆனால், மானியம் நியாயமற்ற முறையில் இருந்ததாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியிருந்தது. அமெரிக்க வர்த்தகத் துறை அளித்த தகவல்படி, குறிப்பாக இந்தியாவில் இருந்து 2024 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட சோலார் பேனல்களின் மதிப்பு $792.6 மில்லியன் ஆகும். இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 9 மடங்கு அதிகம்.
அமெரிக்கா பர்ஸ்ட்
டிரம்பின் 'அமெரிக்கா பர்ஸ்ட்' என்ற கொள்கை தொடர்வதால், இந்த முடிவு அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்று டிரம்ப் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த வரி வாடிக்கையாளர்களைதான் பாதிக்கும் என்றும், இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தையில் கடைசி இடத்திற்கு தள்ளப்படும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏன் வரி?
முன்னதாக அமெரிக்கா இந்தியா மீது 50% வரியை விதித்திருந்தது. இந்த வரி காரணமாக அமெரிக்காவுடன் இந்திய பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தது. பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்பட்டது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது. எனவே மொத்த வரியை 18% ஆக குறைத்தார் டிரம்ப்.
இருப்பினும், இந்த வரியை சட்டவிரோதம் என அமெரிக்க நீதிமன்றம் சொல்லிவிட்டது. இருப்பினும் எல்லா நாடுகளுக்கும் 15% வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இந்த பின்னணியில்தான் மீண்டும் இந்திய பொருட்கள் மீது, 125% வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
-
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications