8.09 பில்லியனை தொடும் மக்கள்தொகை! உலகளவில் இந்தியா முதலிடம்! அடுத்தடுத்த இடங்களில் சீனா, அமெரிக்கா
வாஷிங்டன்: 2025ம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டு தினமான இன்று உலக மக்கள்தொகை 8.09 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.அதேபோல் உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சீனா 2வது இடத்திலும், அமெரிக்கா 3வது இடத்திலும் உள்ளதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
US Census Bureau எனும் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் என்பது அமெரிக்காவின் கூட்டாச்சி புள்ளியியல் அமைப்பின் முதன்மை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு என்பது அமெரிக்க மக்கள் மற்றும் அவர்களின் பொருளாதாரம் குறித்த தரவுகளை தயாரித்து வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தான் 2025ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இந்த ஆங்கில புத்தாண்டையொட்டி தான் உலக மக்கள்தொகை குறித்த முக்கிய விபரங்களை இந்த அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உலக மக்கள்தொகை என்பது 2025 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 8.09 பில்லியனை எட்டும். அதாவது ஒரு பில்லியன் என்பது 100 கோடி. அப்படியென்றால் உலக மக்கள்தொகை என்பது 800 கோடியே 9 லட்சம் என்ற அளவில் இருக்கும். புரியும்படி கூற வேண்டும் என்றால் 8,092,034,511 என்ற அளவில் மக்கள் தொகை என்பது இருக்கும்.
இது கடந்த 2024ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை ஒப்பிடும்போது 71 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் அப்படியென்றால் 71 மில்லியன் என்பது 7.10 கோடியாகும்) அதிகமாகும். மேலும் உலகம் முழுவதும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் பிறப்பு சதவீதம் என்பது 4.2 என்ற அளவிலும், இறப்பு சதவீதம் என்பது 2.0 என்ற அளவிலும் இருக்கும்.
மேலும் உலகளவில் மக்கள்தொகையில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2024 ஜுலை மாத நிலவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை என்பது 141 கோடியாகும். இதற்கு அடுத்தப்படியாக சீனா 2ம் இடத்தில் உள்ளது. சீனாவின் மக்கள்தொகை என்பது 140.8 கோடியாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3ம் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவின் மக்கள்தொகை என்பது 34 கோடியே 11 லட்சத்து 45 ஆயிரத்து 670 என்ற அளவில் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மக்கள்தொகை என்பது 34 கோடியே 11 லட்சத்து 45 ஆயிரத்து 670 என்று இருந்தது. அமெரிக்காவில் 2024ம் ஆண்டில் மட்டும் 2.6 மில்லியன் அதாவது 26 லட்சம் என்ற அளவில் மக்கள்தொகை உயர்ந்துள்ளது. 2025 ஜனவரியை பொறுத்தவரை அமெரிக்காவின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதமும் தற்போது கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 2025 ஜனவரி மாதம் அமெரிக்காவில் ஒவ்வொர 9 செகண்ட்டுக்கும் ஒரு குழந்தை பிறக்கும். ஒவ்வொரு 9.4 செகண்ட்டுக்கும் ஒருவர் இறக்கும் சர்வதேச அளவில் நடக்கும் இடம்பெயர்வு அடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு 23.2 செகண்ட்டுக்கும் அமெரிக்க மக்கள்தொகையில் ஒருவர் சேர்க்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications