Arisi Paruppu Saadham: மணமணக்கும் கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி தெரியுமா?
அரிசி பருப்பு சாதம்: கொங்குநாட்டு உணவு வகைகளுக்கு என்று தனி ருசி உள்ளது. குறிப்பாக கோவை என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது அரிசிபருப்பு சாதம்தான். சூடாகவும், சுவையாகவும், சிம்பிளாகவும் செய்யக்கூடிய அரிசிபருப்பு சாதம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
கோவையில் அரிசி பருப்பு சாதம் மிகவும் ஸ்பெஷலான உணவாகும். வீட்டிற்குத் திடீரென உறவினர்கள் வந்துவிட்டால், இரவில் மழை வந்தால், பரப்பாக இருக்கும் நாளில் சிம்பிளான உணவு செய்ய வேண்டும் என்றால் எல்லோரின் சாய்ஸும் கண்டிப்பாக இந்த அரிசி பருப்பு சாதமாகத்தான் இருக்கும். வெறும் 15 நிமிடங்களில் சூடாக சுவையாக சமைத்து பரிமாறக் கூடிய அரிசி பருப்பு சாதம் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - அரை கப்
சமையல் எண்ணெய் தேவையான அளவு
சீரகம் - கால் டேபிள் ஸ்பூன்
கடுகு - கால் டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 6 பல்
தக்காளி - 2
பெருங்காயத்தூள் - கால் டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் - அரை டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி?
1. முதலில் அரிசி மற்றும் துவரம்பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
2. அடுப்பில் குக்கரை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். கடுகு தாளித்த பின்னர் சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், நறுக்கி பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
3. வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு, சாம்பார் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
4. அனைத்துப் பொருள்களையும் நன்கு வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
5. நன்கு கொதித்த பின்னர் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து குக்கரை மூடி வைத்து விசில் விட்டு காத்திருக்கவும். விசில் போனதும் கொத்தலமல்லி இலை தூவி இறக்கவும். சூடான சுவையான அரிசி பருப்பு சாதம் ரெடி.
அரிசி பருப்பு சாதத்துடன் அப்பளம், பருப்புச் சட்னி வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இந்த எளிமையான, குறைந்த நேரத்தில் சமைக்கக் கூடிய அரிசி பருப்பு சாதத்தை சமைத்து பாருங்க












Click it and Unblock the Notifications