கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை தீர.. பாசி பருப்பு போதுமே.. இதை மட்டும் செய்து பாருங்க, பணம் சேரும்
சென்னை: கழுத்தை நெரிக்கும் கடனில் மூழ்கியிருப்பவர்களுக்கு எளிய பரிகாரம் ஒன்று சொல்லப்பட்டுள்ளது.. அளவுக்கு அதிகமாக கடன்பட்டவர்களும், தவணை கொடுக்க முடியாமல் தடுமாறுபவர்களும், இந்த எளிய பரிகாரத்தை எளிதாக செய்யலாம்.
கடன் பிரச்சினை தீர்க்க, பாசிபருப்பு போதும் என்கிறார்கள்.. இந்த பாசிபருப்பில் பரிகாரங்களை செய்வதால், அதன் பலனை விரைவில் காண முடியும்.. இதற்கு சிறுபருப்பு எனப்படும் பாசி பருப்பை வாங்கி வைத்து, இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஊற வைக்க வேண்டும்..

பாசிப்பருப்பு முக்கியம்
1 கைப்பிடி பாசிப்பருப்பு, 1 கைப்பிடி வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து ஒரு கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றி ஊற வைத்தால் போதும்.. மறுநாள் காலை இந்த பாசி பருப்பை கொண்டு போய் அப்படியே பசு மாட்டிற்கு, உங்கள் கையாலேயே உண்ண கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்குபோது, உங்களது கடன் பிரச்சனையும் தீர வேண்டும் என்று கோமாதாவிடம் வேண்டி கொள்ள வேண்டும்.
உங்கள் கையால் எந்த அளவுக்கு பாசிப்பருப்பு, வெல்லத்தை தருகிறீர்களோ, அந்த அளவுக்கு வறுமை நீங்கி செல்வம் தேடி வரும்.. அதேபோல, ஒரு கைப்பிடி பச்சரிசியை இரவு ஊற வைத்து காலையில் சர்க்கரை, வாழைப்பழம் கலந்தும் பசுவிற்கு தரலாம்.. இதன்மூலம் எளிதில் கடனை அடைக்க முடியும்.
சிறுபருப்பு பாயாசம்
அதேபோல, புதன்கிழமைகளில் பாசிப்பருப்பு வாங்கி கோவிலில் குருக்களுக்கு தானம் கொடுக்கலாம்.. ஆதரவற்றவர்கள் வாழும் ஆசிரமங்களுக்கும், ஏழை குடும்பத்திற்கும் தானம் கொடுக்கலாம்.. இதை வாங்குபவர்கள் சமைத்து சாப்பிடும்போது, உங்களது நிதி நெருக்கடி விரைவில் தீரும். சிறுபருப்பை தானம் செய்ய, செய்ய, அந்த அளவுக்கு உங்களது கஷ்டங்கள் தீரும்.
பாசிப்பருப்பு வறுமை தீர்க்கும்
அதேபோல, கோவிலில் பிரதோஷ நேரத்தில் பாசிப்பருப்பு பாயாசம் செய்து ஏழைகளுக்கு உங்கள் கையாலாயே சாப்பிட தரலாம்.. அல்லது ஆசிரமங்களுக்கு பாசி பருப்பு பாயாசம் செயது கொண்டுபோய் உங்கள் கையாலேயே பரிமாறிவிட்டு வரலாம்.. வறுத்த பாசிப்பருப்பை காக்கை குருவிகளுக்கும் இரையாக சாப்பிட தரலாம். பாசிப்பருப்பு தானம் என்பது, வீட்டிலுள்ள பணக்கஷ்டம் மட்டுமின்றி, மன கஷ்டங்களையும் தீர்க்கும்..
வியாழக்கிழமைதோறும் உங்களது வீட்டில் பாசி பருப்பு பாயாசத்தை செய்ய வேண்டும். இதனை பூஜை அறையிலுள்ள தெய்வத்திற்கு நிவேதனமாக படைக்க வேண்டும். பிறகு, தேங்காய் எண்ணெயில் வாழைத்தண்டு திரியினை போட்டு தீபமேற்றி வழிபட வேண்டும். இதனை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக செய்து வந்தாலே, மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும் என்பார்கள்.












Click it and Unblock the Notifications