இறந்தவரின் தாலியை! "ஜென்டில்மேன்" ஹீரோ அர்ஜுன் போல் மோதிரமாக அணியலாமா?
சென்னை: இறந்தவர்களின் தாலியை அவர்களுடைய மகளோ மருமகளோ அல்லது வேறு பெண்களோ பயன்படுத்தலாமா? அப்படி செய்தால் என்னென்ன விளைவுகள் நடக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திருமாங்கல்யம் என்பது எப்போதும் பெண்களால் முக்கியத்துவம் தரப்படும் புனிதமான ஒன்று. இதை வெறும் கயிறாகவோ நம் உயிரில் கலந்த ஒன்றாகவோ பார்ப்பது அவரவர் மனதை பொருத்ததாகும்.

தாலியை கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு வேலைக்கு செல்வோரும் இருக்கிறார்கள். அதே தாலிக்கு தினமும் பொட்டு வைத்து கண்களில் ஒற்றிக் கொள்வோரும் இருக்கிறார்கள். மேலும் இதை ஒரு ஆபரணமாக பார்க்கப்படக் கூடாது.
இது உணர்வு சம்பந்தப்பட்டது. மேலும் தெய்வீக உணர்வுடன் இரண்டறக் கலந்து பார்க்கப்படுவது என்பதாகும். திருமாங்கல்யத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறார். அந்த காலத்தில் தாழை பனை மரத்தில் தாலி செய்து போட்டுக் கொண்டனர்.
இதனால்தான் இதற்கு தாலி என பெயர் வந்ததாகவும் ஒரு சாரார் கூறுகிறார்கள். மேலும் ஒரு மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கை வைத்தும் தாலி கட்டும் வழக்கம் இருந்தது. இது மெல்ல நாளடைவில் அவரவர் வழக்கத்திற்கென ஒரு தாலி என வந்தது.
அதை மஞ்சள் கயிற்றில் கட்டிக் கொண்டனர். மேலும் அத்துடன் சில உருப்படிகளையும் சேர்த்துக் கொண்டனர். பின்னர் தற்போது பலர் மஞ்சள் கயிற்றுக்கு அவ்வப்போது மஞ்சள் தேய்த்து பராமரிக்க முடியவில்லை என்பதால் தங்கத்தால் ஆன சரடை கயிற்றில் கோர்த்து போட்டுக் கொள்கிறார்கள்.
தாலி அணிந்து கொண்டிருந்த பெண் இறந்துவிட்டால் அந்த தாலி யாருக்கு சொந்தம் என்பது குறித்து நமக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இறந்து போன பெண்ணின் தாலி என்பது அவருடைய மகள் இருக்கும் போது அந்த தாலி மகளுக்குத்தான் சேர வேண்டும்.
ஒரு வேளை இறந்தவருக்கு மகளே இல்லாவிட்டால் மகனுக்கு போய் அது மருமகளுக்கு போய் சேர வேண்டும். எல்லாம் சரி! அந்த மகளோ மருமகளோ இறந்தவரின் தாலியை தாலியாகவே பயன்படுத்தலாமா என்றால் கூடவே கூடாது.
தாலியையே மோதிரமாகவும் சிலர் அணிந்து கொள்வார்கள். ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுன் அணிந்திருப்பாரே! அப்படித்தான்! ஆனால் இப்படியும் அணியக் கூடாது என சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறந்தவரின் திருமாங்கல்யத்தில் உள்ள தங்கத்தை உருக்கி அதை வேறு விதமாக , அதாவது வேறு நகையாக செய்து கொள்ளலாம்.
இல்லாவிட்டால் புதிதாக திருமாங்கல்யம் செய்யும் போது கூட அந்த தங்கத்துடன் இந்த தங்கத்தை உருக்கி கலந்து கொள்ளலாம். திருமாங்கல்யம் என்பது குரு மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டது. இதை உருக்கி வேறு நகையாக அணிந்து கொள்ளலாம்.
இப்படி செய்துவிட்டால் சுக்கிரனின் ஆதிக்கமும் குருவின் ஆதிக்கமும் இல்லாமல் போகுமா என்றால் போகாது. பித்ருவான இறந்தவரின் தாலியை வேறு ஒரு ஆபரணமாக அணியும் போது அவர்களுடைய பரிபூரண அருளும் கிடைக்கும்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications